திங்கள், 27 அக்டோபர், 2014

பசித்த வயிற்றுடன் படுக்கைக்கு செல்லும் குழந்தைகள் இந்தியாவில் அதிகம்


புதுதில்லி, அக். 26-இந்தியாவில் 3ல் 1 குழந்தை பசித்த வயிற்றுடன்தான் படுக் கைக்கு செல்கிறது. 30.7 விழுக்காடு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குறைந்த எடையுடன்தான் உள் ளனர் என சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனமே உலகளவில் பசிக்கான அளவீடுகள் தயாரித்து ஆண்டுதோறும் வெளியிடுகிறது. தில்லியில் ஞாயிறன்று இவ் வமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது:
76 நாடுகளை கொண்ட பசியில் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 55வது இடத்தில் இருக்கிறது. இந்நிலைமை இந்திய குழந் தைகளின் உண்மை நிலையை தெளிவுபடுத்துகிறது. 2005-2006ல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைவானவர்கள் 45.1 விழுக்காடு இருந்தனர். தற்போது அது 30.7 விழுக்காடாக குறைந்துள்ளது என்றாலும் இது கவலைக்குரிய நிலைமை யாகவே உள்ளது. ஏனெனில் பிறந்ததிலிருந்து 5 வயது வரைதான் மூளையின் வளர்ச்சி துரிதமாக நடை பெறும். அப்போது சத்தான உணவு அவசியம். ஆனால் இவ்வயதில் சத்தின்மையோ ,போதாக்குறை சத்துணவோ அல்லது எந்த உணவுமின்றி பசியால் வாடுவ தோ குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்.
இதனால் நாட்டின் எதிர்கால தலைமுறை யின் வளர்ச்சியே பாதிப்புக்குள்ளாகி விடும். இவ்வாறு உணவின்றி தவிக்கும் குழந்தைகள் வயதுக்கு வருவது தாமதமாகும். இப்பாதிப்புகளை கவனத்தில் கொண்டே மதிய உணவுத்திட்டம், ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. ஆனால் இத்திட் டங்களில் உள்ள குறைபாடு இத்திட்டங்களைக் கொண்ட பள்ளியில் படிக்க வரும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். பள்ளிக்கு வராத, கல்விமுறையிலிருந்து வெளியேற்றப் பட்ட மிக ஏழைக் குழந்தைகளுக்கு திட்டத்தின் பயன்கள் கிடைக் காது. ஏழை மக்களின் வேலை யில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட் டங்களின் மூலமாக கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு மிகக்குறைந்த அளவிலான உணவைபெற முடியும் என்பதால் இத்திட் டங்கள் அமல்படுத்தப்பட்டன. பொது விநியோகத்திட்டமும் இவர்களுக்கு உதவி புரிந்தது. இருப்பினும் இத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் சொற்ப வரு வாய் மற்றும் மானியங்களின் மூலம் உணவுப் பொருட்களும் போதுமான ஊட்டச்சத்தை அளிப்ப தில்லை என்பதும் உண்மையாக இருக்கிறது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில் பாஜக அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை படிப்படியாக குறைத்து, அதை ஒழித்துக் கட்ட முயற்சித்து வருவதற்கு நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் அமர்த்தியா சென் மற்றும் பேராசிரியர் ஜீன் டிரெஸ் ஆகி யோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரெஸ் ஆகி யோரும் உணவு உரிமைக்கான கூட்டமைப்பினரும் இணைந்துஅறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ள தாவது:
இதுபோன்ற வேலை வாய்ப்பு,உணவு மானியத் திட்டங்கள் மற்றும் பொது விநியோகத் திட்டங்களை குறைப்பதும் ரத்து செய்வதும் ஒரு நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கு இழைக்கப் படும் அநீதியாகும். `கீளின் இந்தியா’ என்ற பிரச்சாரத்தில் இது போன்ற மிக முக்கியமான விசயங்கள் குறித்த விவாதங்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுவிட்டன. மேலும் இதுபோன்ற அடிப் படையான விசயங்களை எல்லாம் விவாதிப்பது கிட்டத்தட்ட காலப்போக்கில் மறைந்து போன வழக்க மாகி வருகிறது. கீளின் இந்தியா என்பது பசித்த வயிறுகளுடன் எப்படி நிறைவேறும். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: