செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

உண்ணாநோன்பு போராட்டம் அனைவரும் பங்கேற்பீர்!!!!

BSNL ஊழியர் சங்கம் 
தமிழ்நாடு தொலைதொடர்பு  ஒப்பந்ததொழிலார்  சங்கம் .கடலூர் மாவட்டம் .

         உண்ணா  நோன்பு போராட்டம் 


அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே! 
          வணக்கம். கடலூர்,பாண்டிச்சேரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் வழங்கப்படாத தை  கண்டித்தும்,உடனடியாக ஊதியம் பட்டுவாடா செய்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்தியும் .நமது இரண்டு மாநிலச் சங்கங்களின் அறைகூவலை ஏற்று
  கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 29.08.2018 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் ஒரு நாள் உண்ணாநோன்பு போராட்டம் நடைபெறும்.BSNLEU-TNTCWU சங்கங்களின் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும்,கிளைச் செயலர்களும்,முன்னணித் தோழர்களும் தவறாமல் பங்கேற்று சிறப்பிககுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோரிக்கைகள் 
மாநில  நிர்வாகமே ! 
* ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு  ஜூலை  2018 மாத  ஊதியத்தை உடனடியாக  வழங்கிடு .
* 2009-2010 நிலுவை தொகையை  மேலும்  தாமதிக்காமல் வழங்கிடு.
* திறனுக்கு ஏற்ற ஊதியத்தை மாநிலம்  முழுவதும்  வழங்கிடு .
* தமிழகம்  முழுவதும்   ஒரே  சீரான டெண்டர்  முறையை அமுல்படுத்து .
  
அனைவரும் பங்கேற்பீர் !வெற்றி பெறச் செய்வீர் !!
                                                          தோழமையுடன் 
           K,T.சம்பந்தம்                         M.பாரதிதாசன்