வெள்ளி, 14 டிசம்பர், 2018

தொடர் போரட்டத்திற்கு வெற்றி


BSNLEU- TNTCWU

அன்பார்ந்த தோழர்களே!

நமது மாநில, மத்திய சங்கங்களின் தொடர் முற்சியின்  பலனாக மாநில நிர்வாகத்திற்கு ரூபாய் ஆறு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என்று தமிழ் மாநில நிர்வாகம் உறுதி அளித்ததின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் நாம் நடத்த இருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. பிரச்சினை தீர முயற்சி எடுத்த நமது மாநில, மத்தியசங்கங்களுக்கு நன்றியினையும், இரண்டு கட்ட போரரட்டங்கள் நடத்திய நமது தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
BSNLEU -TNTCWU
கடலூர் மாவட்ட சங்கம்

திங்கள், 3 டிசம்பர், 2018

காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

AUAB தலைவர்களுக்கும் தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது . BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை AUAB தலைவர்கள் ஏற்கவில்லை
இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன் விவாதிப்பதிற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு செய்துள்ளது. மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல் நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும். 
பி.அபிமன்யூ, பொதுச்செயலர்