வியாழன், 19 மார்ச், 2015

மனு அதர்மம் எனும் மக்காத குப்பை

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக பைபிளில் கூறப்படுகிறது. ஆனால், மனு மட்டும் அன்றாடம் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கிறான். அண்ணல் அம்பேத்கரால், அதிக மாக வெறுக்கப்பட்ட ஒரு மனிதன் உண்டென்றால், அது மனுதான். “அவன் மட்டும் என் கையில் கிடைத் தால், அவனது குரல்வளையைக் கடித்துத் துப்பிவிடுவேன்” என்று ஆவேசப் பட்டிருக்கிறார் பாபா சாகேப்.
மனுதர்ம சாஸ்திரம் என்பது, மனு என்கிற தனிமனிதனின் மூளையில் உதித்த வக்கிரம் மட்டுமல்ல; இந்தியா வில் அன்றைக்கு நிலவிய கொடூரமான சமூக விதிகளைத்தான் தொகுத்துத் தந்திருக்கிறான் அவன். பிரம்மனுடைய முகத்தில் பிறந்தவர் கள் பிராமணர்கள், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள், காலில் பிறந்தவர்கள் சூத்தி ரர்கள் என்கிறான் மனு. கோடானுகோடி தாழ்த்தப்பட்ட மக்கள், நால்வர்ண முறைக்குள்ளேயே இல்லை. அவர்கள் காலில்கூட பிறக்கவில்லை. அதனினும் கீழானவர்கள் என்பதுதான், மனு அதர்மம்.
மனு ஸ்மிருதியில், சூத்திரர்களுக்கு தரப்பட்டுள்ள கடமைகள், தண்டனைகள், ரத்தத்தைச் சூடேற்றுகின்றன. சூத்திரர்கள் என்று மனு வகுத்துள்ள சூத்திரத்திற்குள் சொல்லப்படுவர்கள், பெரும்பகுதியின ராக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே ஆவர். இதைவிடக் கொடூரமாக தலித்துகள் என்று இன்று அழைக்கப்படும்- அன்றைக்கு பஞ்சமர்கள் என்று அழைக்கப் பட்ட எளிய உழைக்கும் மக்கள் நடத்தப் பட்டிருக்கிறார்கள். மனு ஸ்மிருதி எனும் மக்காத குப்பை, 2683 சுலோகங்களைக் கொண்டது. அதில் காணப்படும் அத்தனை வரிகள் மட்டுமல்ல; வரிகளுக்கு இடையிலான இடைவெளியிலும்கூட வக்கிரமும் சமூக அநீதியும் கொப்பளிக்கின்றன. ‘பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு பலத்தையும், வைசிய னுக்கு பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இடவேண்டும்’ என்கிறான் மனு.
அவன் மேலும் சொல்கிறான், பிராமணனுக்கு சர்ம என்றும், சத்திரியனுக்கு வர்ம என்றும், வைசியனுக்கு பூதி என்றும், சூத்திரனுக்கு தாசன் என்றும் பெயரிட வேண்டுமாம். (அத்.2, சுலோகம் 31, 32)இன்றைக்கும் கூட அறிந்தோ அறியா மலோ, இந்த கட்டளை தொடரத்தான் செய்கிறது. யாரெல்லாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடக்கூடாது என்றும் சொல்லி யிருக்கிறான் மனு.
இந்தப் பட்டியலில், திருடன், நாத்திகன், மருத்துவன் (நாவிதன்), மாமிசம் விற்போன், ஊர்ப்பொது ஏவலாளன், ஆடு, மாடு மேய்த் துப் பிழைப்பவன், பிராமணனை வெறுப்போன், பாட்டுக் கட்டுபவன் (கவிஞன்), கூத்தாடுவோன், சாதிவிட்டு சாதி மாறி திருமணம் செய்தவன், விதவைக்குப் பிறந்த பிள்ளை, தாழ்ந்த குலத்தானிடம் கலைகள் பயின்றவன், கீழ் சாதியின ருக்குப் பயிற்றுவித்தவன், இழிதொழில் இயற்றுபவன், சிறிய தெய்வங்களை வழிபடுபவன் என்றெல்லாம் நீள்கிறது.திருப்பூரில் கூடும் தமுஎகச மாநாடு, “மனுதர்ம தந்திரத்தை முறியடிப்போம்! முற்போக்குத் தமிழ்மரபை முன்னெடுப்போம்!” என்ற மூல முழக்கத்தை முன்வைத்துள்ளது. மனுவின் விலக்கப்பட்டவர்களின் பட்டியலில், ஏதாவது ஒருவகையில் இடம் பெறுபவர்கள்தான் நாம் அனைவருமே.
நாம் ஒன்றுகூடுவதே ஒன்றாக அமர்ந்து, கூட்டாஞ்சோறு சாப்பிடுவதே, மனுவுக்கு எதிரான ஒரு நடவடிக்கைதான். நான்காம் வருணத்து சூத்திரன், சாஸ்திர விரோதமாக கூத்திடவும், பாடவும், இசைக்கருவிகள் இசைத்தலும் கூடாது என்றெல்லாம் பட்டியலிடுகிறான் மனு. சூத்திர - பஞ்சமரின் சேர்ந்திசை யிலும், கூத்திலும் மனுவின் கல்லறை அலறட்டும். சூத்திரன் தன்சாதியிலும், வைசியன் தன்சாதி மற்றும் சூத்திரசாதியிலும், சத்திரியன் தன்சாதி மற்றும் வைசிய- சூத்திர சாதியிலும், பிராமணன் தன்சாதி யிலும் மற்ற மூன்று சாதியிலும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியதோடு, சூத்திரன் தன்சாதியைத் தவிர்த்து, வேறு எந்தச் சாதியிலும் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று மனு விதித்திருக்கிறான்.உயர்சாதிப் பெண்ணுடன், சூத்திரன் உறவுகொண்டால் அவனது ஆணுறுப்பை அறுக்க வேண்டும் என்பது, மனுவின் கட்டளை. சூரக்கோட்டை மாரிமுத்து வுக்கு இதற்கான தண்டனையைத்தான் மனுவின் வாரிசுகள் வழங்கினார்கள். தர்மபுரி இளவரசன் மீது ஏறி ஓடியது, ரயில் அல்ல; மனுவின் தேர்ச்சக்கரங்கள் தான். பிணத்தின் ஆடையைத்தான் சண்டாளர்கள் என இழிவுபடுத்தப்பட்ட பஞ்சமர்கள் அணிய வேண்டும் என் கிறான் மனு. இளவரசன் போன்றவர்கள் ஜீன்ஸ் அணிவது கண்டு, சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டதற்குக் காரணம் மனு வின் மரபணுதான்.
கௌரவக்கொலை செய்பவர்களின் கைகளில் இருப்பது, மனு கொடுத்த கொடுவாள்தான்.அகங்காரம் மிகுந்து, பிராமணனுக்கு தர்மத்தை உபதேசிக்கிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்றும், சூத்திரன் வேதத்தைச் சொன்னால் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் வேதத்தை கேட்டால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும், மனத்திற்குள் நினைத்தால், இருகூறாக பிளந்துவிட வேண்டும் என்றும் சொல்கிறான் மனு.
ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, இடஒதுக்கீடே கூடாது என்பவர்கள் மனுச்சூத்திரத்திற்கு பொழிப் புரை எழுதுகிற, நவீன மனுக்களே ஆவார்கள். பிராமணன் எந்தப் பாவம் செய்தாலும், அவனைக் கொல்லக்கூடாது; காயப்படுத்தவும் கூடாது; மாறாக, பொரு ளைக் கொடுத்து, ஊரைவிட்டு வெளி யேற்ற வேண்டுமாம். அதாவது, யாரையாவது கொலை செய்தால்கூட அதற்காக பரிசளித்து, அனுப்ப வேண்டு மாம். ஒருவேளை தண்டித்தே ஆக வேண்டும் என்றால் முடியின் முனையை வெட்டினாலே போதும்; ஆனால், அதே குற்றத்தைச் செய்த பிற வர்ணத்தாரின் உயிரைப் பறிக்க வேண்டும் என்பதே, மனு அதர்மம். மற்றவரின் உயிரும், உயர் குலத்தவரின் மயிரும் சமமாம். இந்த நால்வர்ண முறையை நடைமுறைப்படுத்தத்தான் மோடி ஆட்சி முன்வந்திருக்கிறது. இந்திய வரலாற்று ஆய்வுமையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர்,
ஒய்.சுதர்சனராவ் என்ற ஆர்எஸ்எஸ் ஆசாமி. அவர் சொல்கிறார்: “ சாதி என்பது, சமூகப் பிரிவினை; வர்ணம் என்பது,அவரவர்க்குரிய பணிகளை வரையறுப் பது; சாதி என்பது, மனிதவள பயன்பாட் டிற்கான கட்டமைப்பு; வர்ணம் மோட்சத் திற்கு வழி சொல்கிறது” என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் அவர், புராதன வர்ண அமைப்பு, நன்றாகச் செயல் படக்கூடியது; அதைப் புனரமைக்க வேண்டும் என்கிறார். இவருடைய தலைமையிலான அமைப்புதான் இனி, இந்திய வரலாற்றை எழுதப் போகிறது. சூத்திரர்கள் - பஞ்சமர்களை மட்டு மல்ல; அனைத்துச் சாதியிலுள்ள பெண் களையும் மிக இழிவாகக் கருதுகிறான் மனு. “தாய்- தங்கை இவர்களுடன்கூட தனியாக- ஒன்றாக உட்காரக்கூடாது;
இந்திரியங்களின் கூட்டமானது, மிக வும் பலமுடையது; அது, யாரையும் மயக்கிவிடும்” (அத்.215) என்பது, மனுவின் கூற்று. தில்லியில் நிர்பயா எனப்படும் பெண்ணை கும்பல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கிய, முகேஷ்சிங் அளித்த பேட்டியில், இரவில் ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சி அதிக மிருக்கும்; அந்தநேரத்தில் நிர்பயா பேருந்தில் பயணம் செய்ததுதான் தவறு; அதனால்தான் பாலியல் வல் லுறவு செய்யும்படி ஆயிற்று என்று கூறியிருந்தான். இதிலிருந்தே இந்தப் பயல், மனிதப்பால் குடித்து வளர்ந்தவன் அல்ல; மனுவின் பால் குடித்து வளர்ந் தவன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ‘அழகான மாதர்கள், எவ்விடத் திலிருந்தாலும் ரத்தினம்போல அதைக்கவர்ந்து கொள்ளலாம்’ என்ற மனு வின் வாசகமும், முகேஷ்சிங் என்றமூர்க்கனுக்கு தைரியம் கொடுத்திருக்கக் கூடும்.
‘கணவன் துர் ஆச்சாரம் உள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரி லோலனாக இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், பதிவிரதையான ஸ்திரியான வள், அவனை தெய்வத்தைப் போல பூஜிக்க வேண்டும்‘ (அத்.5, சுலோகம் 164). இந்த வழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கற்புக்கரசிதான் தொழு நோயாளியாக இருந்த கணவனை, இன்னொரு பெண்ணின் வீட்டிற்குத் தூக்கிச் சென்ற நளாயினி போன்ற புராண பாத்திரங்கள். இதற்கான எதிர்மரபுதான் கொலைசெய்ய குன்றின் உச்சிக்கு அழைத்துச் சென்ற கணவனை, கீழே பிடித்துத் தள்ளிய குண்டலகேசி. ‘சிறுமியாக இருக்கும்போது, தகப் பனுக்கும், வாலிபத்தில் கணவனுக்கும், கணவனுக்குப் பிறகு பிள்ளைகளுக்கும் கட்டுப்பட்டு இருக்க வேண்டியவள் பெண்; அவள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கவே கூடாது’ என்பதுதான் மனு வின் குரல் (அத்.5. 148) ‘எந்த நிலையிலும், அடங்கி நடக்க மாட்டோம்; சுதந்திரச் சிறகு விரிப்போம்!’ என விடுதலை முழக்கமிடும் பாரதியின் புத்திரிகள், சரிநிகர் சமானமாய், அணிவகுக்கும் களம்தான் தமுஎகச மாநாடு.மோடி ஆட்சி மத்தியில் அமைந்த பிறகு, ``மகாத்மா காந்தியை படுகொலை செய்த கொடியவன் கோட்சேவிற்கு சிலை வைப்போம்; இந்தியாவில் பிறந்த எல்லோரும் இந்து மதத்தில், அவரவர் சாதிப்படி மீண்டும் சேர வேண்டும்; ராமனின் பிள்ளைகளுக்கு மட்டும்தான் இங்கு இடமுண்டு; மசூதிகள் அனைத் தும் வெறும் கட்டடமே, அவற்றை எப்போது வேண்டுமானாலும் இடித்துத் தள்ளலாம்; அன்னை தெரசாவின் சேவைக்குப் பின்னால் ஒளிந்திருந்தது, மதமாற்றம்தான்; சேதுசமுத்திரத் திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்றவிட மாட்டோம்; பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமனுக்குக் கோயில் கட்டியேதீருவோம்; அரசியல் சாசன முகவுரை யிலிருந்து, மதச்சார்பற்ற- சோசலிச எனும் வார்த்தைகளை அகற்றுவோம்” என்றெல்லாம் கொக்கரிக்கப்படும் வாசகங்கள், மனு ஸ்மிருதியின் மறுபதிப்புதான்.நான்கு வருணங்களையும் நான்தான் படைத்தேன்; நானே நினைத்தால்கூட அவற்றை மாற்ற முடியாது என்று பகவத் கீதையில் பகர்கிறார் `பகவான்’ கிருஷ்ணன். இதைத்தான் இந்தியாவின் தேசிய புனிதநூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். ‘பெண்களை பாவயோனி’ என்று இகழ்கிறது, பகவத்கீதையின் ஒன்பதாம் பகுதி. இதனை எரிக்க வேண்டும் என்றுபஞ்சாப் இதழொன்றின் ஆசிரியர் நியூ டான் தாகூர் கூறியதற்காக, அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று கூறினால், மத்திய அமைச்சர் பதவி. எதிர்த்தால் சிறை. இதுதான் மோடி ஆட்சி.மனுவின் விஷம் தோய்ந்த கத்திதான் படைப்பாளி பெருமாள் முருகனின் நாவை அறுத்து, மௌனத்தைத் திணித்துள்ளது. ‘பிகே’ படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதும், தாலி குறித்து எவனாவது பேசினால், அவனது மனைவியின் தாலியை அறுப்போம் என்பதெல்லாம், கல்லறையிலிருந்து எழும் மனுவின் குரல்களே!மனுவின் வார்த்தைகள், இப்போதும் புத்தகத்தில் மட்டுமில்லை; காலங் காலமாக போதிக்கப்பட்டு, புத்தியில் பொதிந்து வாழ்கிறது; அதை கலை- இலக்கியப் படைப்புவாளைக் கையில் ஏந்தி, அறுத்தெறியத் துடிப்பவர்களின் அணிவகுப்பே, திருப்பூரில் நடைபெறும் தமுஎகச மாநாடு. மனுவுக்கு எதிராக மனிதத்தைக் கூட்டுவோம்!
--- மதுக்கூர் இராமலிங்கம்...நன்றி தீக்கதிர்19.03.2015

கையெழுத்து இயக்கமும் மற்றும் சில மத்திய சங்க செய்திகளும்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
கையெழுத்து இயக்கமும் மற்றும் சில மத்திய சங்க செய்திகள் குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read >>>

செவ்வாய், 17 மார்ச், 2015

நிலைக்குழு மற்றும் PLI கமிட்டி முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
12.௦3.2௦15 அன்று நடைபெற்ற நிலைக்குழு மற்றும் PLI கமிட்டிகூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>

வெள்ளி, 13 மார்ச், 2015

பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் ஏப். 21, 22ல் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது

சென்னை, மார்ச் 12-
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ பாதுகாத்திடவும் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்கு வங்கிகளில் கடன் வாங்க அரசே உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் சுமார் இரண்டரை லட்சம் பேர் ஏப்ரல் மாதம் 21, 22 தேதிகளில் நாடு தழுவியஅளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இதுகுறித்து சென்னையில் வியாழனன்று (மார்ச் 12) செய்தியாளர்களிடம் பேசிய பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டார ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.செல்லப்பா, தலைவர் ஆர்.பட்டாபிராமன் ஆகியோர் கூறியது வருமாறு :
மக்களின் சொத்தான பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎஸ்என்எல் என்ற பிரம்மாண்ட பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதிதேவைப்படுகிறது. உரிய சாதனங்கள் இல்லாமல் சிறந்த சேவையை வழங்கமுடியாது. இந்த சேவையை அளிக்க அதிக கோபுரங்கள் தேவை. இதற்கு பணம் தேவை. ஆனால் பிஎஸ்என்எல் விரிவாக்கத்திட்டத்திற்கு போதிய பணம் இல்லை.
காரணம் என்னவென்றால் 2009ல் இருந்து நிறுவனம் நட்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் 2004ல் பிஎஸ்என்எல் ரூ.10ஆயிரம் கோடி லாபம் ஈட்டியது. இதற்கு முன்பு இருந்த மன்மோகன்சிங் அரசாங்கமும் தற்போதுள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசாங்கமும் தனியார்மய, தாராளமய பொருளாதார கொள்கைகளை மிகவேகமாக அமலாக்கி தனியார் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட அரசு சதி
உதாரணத்திற்கு விரிவாக்கம் செய்வதற்கு வங்கியில் பிஎஸ்என்எல் கடன் கேட்டால் தரமறுக்கிறார்கள். காரணம் அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் உத்தரவாதம் அளிக்க மத்திய அரசு தயாராக இல்லை. இதனால் பிஎஸ்என்எல் சேவையை விரிவாக்கம் செய்யமுடியவில்லை. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வங்கிகளில் கடன் வாங்கி 2லட்சம் கோடி ரூபாய் வரை பணம் வைத்திருக்கின்றன. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒரு நட்டமடைந்த நிறுவனமாக மாற்றி அதை மூடிவிடுவது என்பது தான் அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது.
ஆனால் ஊழியர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய சங்கங்கள் அனைத்தும் இந்நிறுவனத்தை லாபகரமாக நடத்த தொடர்ந்து போராடி வருகின்றன.
தேசப்பாதுகாப்பு தனியாருக்கு பொருந்தாதா?
2007 ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4கோடியே 50லட்சம் புதிய செல்போன்சேவைக்கான இணைப்புகளை வழங்குவதற்குதேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு விடப்படவிருந்த டெண்டர் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்ற அதிகாரிகளும் ஊழியர்களும் 2007 ஆம்ஆண்டு ஜூலை மாதம் 11ஆம்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர்.
அதன் பின்னர்நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 2கோடியே 25லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. 2010ல் பிஎஸ்என்எல் நிறுவனம் கோரிய 9கோடியே 30லட்சம் இணைப்புகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டது.
சீனாவை சேர்ந்த ஹவாய் நிறுவனத்திடமிருந்து உபகரணங்கள் வாங்கினால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் தலைமை தணிக்கை அதிகாரியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதே நிறுவனத்திடமிருந்து இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்வதை மத்திய அரசு தடுக்கவில்லை. தேசப்பாதுகாப்பு என்றால் தனியாருக்கு பொருந்தாதா?ஏற்கனவே எங்களது 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபமாக நடத்தமுடியும் என்ற யோசனைகளை தெரிவித்தும் 25 லட்சம் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களை பிரதமரிடம் கடந்த மாதம் 25 ஆம் தேதி அளித்தோம். அதற்கு பிறகும் பிரதமர் மோடியோ அல்லது தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத்தோ எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து நட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவேதான் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் உடனடியாக அரசு இந்தப்பிரச்சனையில் தலையிடவேண்டும் என வலியுறுத்தியும் ஏப்ரல் மாதம் 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதில் இந்தியா முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் ஊழியர்களும் அதிகாரிகளும் 100 விழுக்காடு பங்கேற்பார்கள். தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள். எனவே மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்தை நடத்தி தீர்வு காணமுன்வரவேண்டும். இதன் பின்னரும் அரசு செவிசாய்க்கமறுத்ததால் தொடர்போராட்டமாக மாறும். பிஎஸ்என்எல் சொத்து இந்திய மக்களின் சொத்து. அதை காப்பது நாம் அனைவரது கடமையாகும்.
நன்றி தீக்கதிர் 13.௦3.2௦15

12-3-2015 அன்று FORUM சார்பில் நெய்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டம்



வியாழன், 12 மார்ச், 2015

12-3-2015 அன்று FORUM சார்பில் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்



தோழர் கலைமணி பணி நிறைவு பாராட்டு விழா


பாலையாகும் நெய்தல் நிலம்?



கடற்கரையோர மாற்றமும் அங்கு எழுந்துள்ள பிரச்சனைகளும் வெறும் `தேச வளர்ச்சி’ என்ற ஒற்றைச் சொல்லாடல் மூலம் புறம்தள்ளிச் செல்பவை அல்ல. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நிறுவனங்கள் மக்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தங்களது மூலதனப் பெருக்கத்தை மட்டுமே குறி வைத்து அலைகின்றன, உழைப்பாளி வர்க்கத்திற்காக நிற்பவர்களுக்கு இது மிகப்பெரிய சவால்.
 
13 மாவட்டங்களை உள்ளடக்கி 1076 கிலோமீட்டரில் 551 கிராமங்களில் வசிக்கும் சுமார் எட்டு லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது தமிழகத்தின் நெய்தல் பகுதியான கடற்கரை. சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கடற்கரையோர மக்களை வாரி சுருட்டி எறிந்த சுனாமிக்கு முன்புவரை தமிழகத்தின் சமவெளி மனிதர்களுக்கும் கடற்கரை யோர சமூகத்திற்குமான உறவு என்பது சந்தையில் மீன் பேரம் பேசுவதைத் தவிர அதிகம் இருந்தது கிடையாது.சுனாமிதான் அம்மக்களின் துயரை வெளி உலகிற்கு கொண்டு வந்தது. ஆனால் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்த சுனாமி கடற்கரையை ஒரு தங்கச் சுரங்கமாய் அடையாளப் படுத்தியது.

மூலதனக்குவிப்பு
உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் மறுவாழ்வு பணிகளை விட்டுவிட்டு அதை அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகளைமட்டுமே தமிழக அரசு மேற்கொண்டது. எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் வந்தன. உண்மையில் மக்களுக்காக சில அமைப்புகள் பணியாற்றவும் செய்தன. அதன் பிறகான ஆண்டுகளில் கடற்கரையில் கடுமையான மாற்றங்கள் துவங்கின.பலவகையான கணக்கெடுப்புகள் நடந்தன. சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஏராளமான படகுகள் குவிக்கப்பட்டன. படகுகள் அதிகமானதால் போட்டிகள் அதிகமாயின. விசைப்படகுகளின் விசை அதிகரிக்கப்பட்டது. சாதாரண வலைகளைப் பயன்படுத்திய கிராமங் களில் எல்லாம் இரட்டைமடி வலையும், சுருக்கு வலையும் சகஜமானது. கரை யோரம் கட்டுமரங்களில் சென்று மீன் பிடித்தவர்களின் நிலை மோசமானது. உள்ளூர்ச் சந்தைகளுக்கான மீன் பிடிப்பு சர்வதேசச் சந்தையை நோக்கி திருப்பப்பட்டது.

பெரும் மூலதனம் மீன்பிடித் தொழிலில் இறங்கியது.மற்றொரு பக்கம் பேரிடரை முன்வைத்து புதிய வகையான மூலதனக் குவிப்பு கடற்கரையை நோக்கிவரத் துவங்கியது. பல்வகை தொழிற்சாலைகள், அனல் மின்நிலையங்கள், எண்ணெய்ச் சுத்திகரிப்பு மண்டலங்கள், நிறுவனங் களுக்கான சிறிய துறைமுகங்கள், ஜவுளிப் பூங்காக்கள், கப்பல் கட்டும் நிறுவனங்கள் என படையெடுக்கத் துவங் கின. உதாரணமாக கடலூர் ஓ.டி முதல்பரங்கிப்பேட்டை வரையிலான 30கி.மீ. தூரத்தில் மட்டும் சுமார் 8000 ஏக்கர்நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இப்படியான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே `சிப்காட்’ ரசாயன வளாகங்களால் இந்தியாவின் அபாயமான கடற்கரையாக அறியப்பட்ட கடலூரின் நிலை மேலும் மோசமானது.

அதேபோல நாகப்பட்டினம் மாவட்டத் தில் சீர்காழி, தரங்கம்பாடி, கீழையூர் ஆகிய வட்டங்களில் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 12 அனல்மின்நிலையங்களுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 16 அனல் மின்நிலையங்களுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆக இந்த மூன்று மாவட்டங்களிலும் இன்னும் சில ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடல் உள்ளது.

ஆக்கிரமிப்புகள்... மீறல்கள்... அழித்தல்கள்...
தமிழகத்தில் இத்தனை அனல்மின் நிலையங்கள் துவக்கப்பட்டால் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கிவிடும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் எந்த ஒரு நிறுவனமும் தமிழகஅரசுடன் இதற்கான ஒப்பந்தம் போட்டதாகத் தெரியவில்லை. புதிய தொழிற் சாலைகள் ஒரு பகுதிக்குச் செல்லும் போது ஆட்சியாளர்கள் வைக்கும் முழக்கம் “நாட்டின் வளர்ச்சிக்கு இது அவ சியம்” என்பதுதான்.இந்த வளர்ச்சி என்றமுழக்கம் பலரை நம்பிக்கை கொள்ளச்செய்கிறது. இது யாருக்கான வளர்ச்சிஎன்ற கேள்வி எங்கும் எழுப்பப்படு வதில்லை. உலகமய அமலாக்கத்தின் முன் அனுபவங்களைப் பார்க்காமல் வளர்ச்சி வரும் என்ற வார்த்தைகளை நம்புகின்றனர். தொழில்மயம் வேலை வாய்ப்பை பெருக்கும் என்பது உலகமயச் சூழலில் பகல் கனவாய் மாறியதுதான் கடந்த இரு பத்தாண்டு கால அனுபவம். மிகப்பெரும் நிறுவனங்களை துவங் கும் போது அவர்கள் சொல்லும் உறுதி மொழிகள் கட்டமைப்புப் பணிகள் முடிந்ததும் வெற்று வாக்குறுதிகளாகவே இருந்து விடுவதுதான் வேதனை.

மற்றொரு பக்கம் இப்படி கடற்கரை சார்ந்து வரும் தொழிற்சாலைகள் செய்யும் சட்ட மீறல்களும், புதிய அரசியல் புரோக் கர்களை வைத்து செய்யும் அடாவடிகளும் வெளி உலகிற்குத் தெரிவதில்லை. நிறு வனங்களுக்கு இடைத்தரகர்களாக இருக்கும் இவர்கள் மக்களைப் பிரித் தாள மிக இயல்பாக சாதி, வட்டார வெறியைக் கிளப்பி விடுகின்றனர். நிறுவனங் களில் கிடைக்கும் ஒப்பந்தத் தொழிலுக் காக நில உடமையாளர்களை இந்த தரகர்கள் கட்டாயப்படுத்தி நிலம் அப கரித்த கதைகள் ஒரு நூறு இருக்கிறது.பரங்கிப்பேட்டை பகுதியில் இரவு 12 மணி வரை பத்திரப் பதிவு அலுவல கங்கள் செயல்பட்டது ஒரு சிறிய உதாரணம். மக்கள் பயன்பாட்டில் உள்ள தரிசுநிலங்கள், சுடுகாடுகள், பள்ளி விளை யாட்டு மைதானங்கள், மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடித் தளங்கள் கைப்பற்றப்பட்டன. சுனாமியிலிருந்து இயற்கையாய் மக்களை பாதுகாத்த மணல் குன்றுகள் சமப்படுத்தப்பட்டன. வரலாற்றுப் புகழ்மிக்க கால்வாய்கள் சீரழிக்கப்பட்டன.

பொய்யான ஆய்வுகள்... கசப்பான உண்மைகள்
கடற்கரையோரம் வருகின்ற பல்வேறு நிறுவனங்கள் அங்கு உள்ள நிலைமையை முழுமையாக ஆய்வு செய்வ தில்லை, அப்படியே செய்தாலும் உண்மை நிலையைச் சொல்வதில்லை. பல்வேறு நிறுவனங்கள் தங்களது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் பொய்யான தகவல்களையே சொல்லி உள்ளனர். உதாரணமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பணிகளை மேற்கொண்டுள்ள ஐ.எல்.எப்.எஸ் என்றஅனல்மின் நிலையம் தனது அறிக்கை யில் மாங்குரோவ் காடுகள் உள்ள பிச்சாவரத்தை 12 கி.மீ. தூரத்திற்கு அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளது. 6 கி.மீ.க்குள்தான் மாங்குரோவ் காடுகள்உள்ளன. அதே போல வேளங்கி ராயன்பேட்டை கிராமத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றுபொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட் டம் நடத்திய குட் எர்த் ஷிப் யார்டு என்றநிறுவனம் மறைமுகமாக பாஸ் பேட் இரசாயன நிறுவனத்தை கொண்டு வருவது கண்டறியப்பட்டு சி.பி,எம் சட்ட மன்ற உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் தடுத்து நிறுத்தப்பட்டது. நிறுவனங்கள் அமைந்தால் வேலைவாய்ப்பு பெருகும், இத்தனை ஆயிரம்பேருக்கு நேரடி, மறைமுக வேலைகள்கிடைக்கும் என தங்களது அறிக்கை களில் நிறுவனங்கள் கூறும். ஆனால் உண்மை மிகவும் கசப்பானது. நாகைமாவட்டம் பிள்ளைபெருமாள் பேட்டை யில் நிலம் கையகப்படுத்தும் போது உள் ளூர் மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் தற்போது அங்கு விரல்விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளூர் மக்கள் வேலை செய்கின்றனர். கட்டுமானப் பணிகளில் உள்ளூர் அல்லது தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் படுவதில்லை.

வடமாநில இளைஞர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். திறன்மிக்க தொழிலாளர்கள் தேவை என்று அவர்கள் கூறினாலும் அதில் முழுமையான உண்மை இல்லை. குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்ட அவர்களை கொத் தடிமைகளாய் கொண்டு வருகின்றனர். அப்பணிகளை உள்ளூர் இளைஞர்கள் செய்ய நேர்ந்தால் அவர்களுக்கு அதிகக் கூலி கொடுக்கவேண்டும் என்பதும், சங்கம் அமைப்பார்கள் என்பதும்தான் புறக்கணிப்புக்கான அடிப்படைக் காரணமாகும்.

மிரட்டலும் அகற்றுதலும் அப்புறப்படுத்தலும்
மீனவர்களின் வாழ்க்கை மோசமான தாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பாரம்பரியமாக படகுகளை நிறுத்தும் இடங்கள், வலைகளை காயவைத்த இடங்கள், கடல் புறம்போக்கு நிலங்கள் எல்லாம் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாகார்ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் கடற்கரையில் நீளமாக வேலி அமைத்து அந்நியர்கள் அத்துமீறி பிரவேசிக்கக்கூடாது என மீனவ மக்களை எச்சரிக்கிறது. கடற்கரை சார்ந்த பல்வேறு சட்டங்களை மீறி கடற்கரையில் மிகப்பெரிய கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. கடலூரில் சிப்காட் வளாகத்தின் ரசாயனக் கழிவுகள் பர வனாற்றின் வழியாகவும், நேரடியாகவும் கடலில் கலக்கப்படு கிறது. மீன்பிடியைத் தவிர வேறு தொழில்களை இச்சமூகம் இன்னும் பழகவில்லை. அவர்கள் வெளியேற்றப்படுவது இன்னும் சில ஆண்டு களில் நடக்க அதிகம் சாத்தியம் உள்ளது. இது அந்த சமூகத்தில் கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.

கடற்கரையோரவாழ்க்கைச் சூழல் பாதிப்பு
கடற்கரை சார்ந்த மீனவர்களின் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. கடற்கரையோரம் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் அதை நம்பிவாழ்ந்த விவசாயிகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக் குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பெண் கள் படும் துயரைச் சொல்லவும் வழி இல்லாமல் தவிக்கின்றனர். காடுகள் அழிக்கப்பட்டு சமவெளியாக மாற்றப்படுவதால் அவர்களது வாழ்க்கைச் சூழல் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது.

உள்ளூரில் அவர் களுக்கு கிடைத்த வேலைகள் முற் றிலும் நிறுத்தப்பட்டன. வேலைக்காக அருகில் உள்ள நகரங்களுக்கோ அல்லது பிற கிராமப் பகுதிகளுக்கோ செல்ல நிர்ப்பந் திக்கப்படுகின்றனர். மிக எளிதாக கிடைத்த உணவுக்கான பொருட்கள், விறகுகள் பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திடீரென அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களை நிலைகுலையச் செய்துள்ளன.

கடற்கரையோர மாற்றமும் அங்கு எழுந்துள்ள பிரச்சனைகளும் வெறும் “தேச வளர்ச்சி” என்ற ஒற்றைச் சொல் லாடல் மூலம் புறம்தள்ளிச் செல்பவை அல்ல. மக்களின் வாழ்வாதாரம் கேள் விக்குள்ளாக்கியுள்ளது. நிறுவனங்கள் மக்கள் வாழ்வாதாரத்தை பற்றி கொஞ்ச மும் கவலைப்படாமல், தங்களது மூலதனப் பெருக்கத்தை மட்டுமே குறி வைத்து அலைகின்றன, உழைப்பாளி வர்க்கத்திற்காக நிற்பவர்களுக்கு இது மிகப் பெரிய சவால்.இந்நிலையில் மக்கள் போராட்டங்கள் மட்டுமே வாழ்வாதாரத்திற்கு குறைந்த பட்ச பாதுகாப்பை உருவாக்கும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராடி, பல வழக்குகளை சந்தித்து தற்போதுதான் உள்ளூர் மக்களுக்கு பரங்கிப் பேட்டை அனல்மின் நிலையத்தில் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது,

சுற்றி உள்ள கிராம மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், கழிப் பிட வசதிகள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கிராமங்களில் சீரழிந்த சாலைகளை புதிதாகப் போடுவது போன்ற ஒப்பந்தத்தின் மூலம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முதல் கட்ட ஒப்பந்தத்தை எட்டிஉள்ளது. தமிழகம் முழுவதும் கடற்கரை யோர மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத் திட ஒன்றுபட்ட போராட்டமே தீர்வாகும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் செய்தி.போராட்டம் தொடர்கிறது. 1076 கிலோமீட் டரை ஒருங் கிணைக்கும் போராட்டமாக இதை விரிவாக்க வேண்டும்.
---- தோழர் S.G.ரமேஷ்பாபு, தீக்கதிர் 12.03.2015

மாநிலச்சங்க சுற்றறிக்கை எண்:29

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
கோவையில் 11.௦3.2௦15 அன்று நடைபெற்ற  தமிழ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>

மாநிலச்சங்க சுற்றறிக்கை எண்:28

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
சில மத்திய சங்க செய்திகளும் CMDஉடன் சந்திப்பும்  அதுபற்றிய விபரங்களை உள்ளடக்கிய நமது மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>

புதன், 11 மார்ச், 2015

மாநிலச்சங்க சுற்றறிக்கை எண்:27

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
தற்போதைய அண்மைச்செய்திகள் குறித்த நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

மாநிலச்சங்க சுற்றறிக்கை எண்:26

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
 ஓய்வு பெறும் தோழர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் குறித்த காலத்தில் கிடைத்திட கார்ப்பரேட் அலுவலகத்தின் வழிகாட்டுதல்களும், இன்னம் பிற செய்திகளும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

மத்திய சங்க சுற்றறிக்கை எண் 4ன் தமிழாக்கம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
நமது மத்திய சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ளது.அதனைப் படிக்க <<<Read>>>

12.03.2015 அன்று அனைத்து கிளைகளிலும் கண்டன முழக்கம் செய்திடுவீர் !

சனி, 7 மார்ச், 2015

அம்பானியை பின்னுக்கு தள்ளிய புதிய பணமுதலை


நாட்டின் மிகப்பெரிய பணக்காரராக `சன் பார்மா’ மருந்து கம்பெனி அதிபர் திலீப் சாங்வி அவதாரம் எடுத்துள்ளார். முகேஷ் அம்பானியை அவர் பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளார்.திலீப் சாங்வியின் சொத்து மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 40ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. முகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 30ஆயிரம் கோடியாகும்.
நவீன தாராளமயக் கொள்கைகளால் சாங்வி, அம்பானி, அதானி போன்ற பகாசுர முதலாளிகளின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் நாட்டின் செல்வ செழிப்புக்கு அடித்தளமாக இருந்து வரும் விவசாயிகள் ஏனைய உழைக்கும் மக்கள் வறுமையிலும், ஏழ்மையிலும் சிக்கித் தவிக்கிறார்கள்.

வெள்ளி, 6 மார்ச், 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது மாவட்ட சங்கத்தின் அமைப்பு செயலரும்,கள்ளக்குறிச்சி கிளைத்தளைவருமான தோழர் S.பொன்மலை TM வடக்கனந்தல் அவர்களுடைய ஒரே மகன் திரு.P.சரவணன் தனது இளம்வயதிலேயே ௦5.௦3.2௦15 அன்று  அகால மரணமடைந்தார்  என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.மகனை இழந்து வாடும் தோழர் பொன்மலை அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கலையும்,பரிவினையும் உரித்தாக்கிக் கொள்கிறோம்.இறுதிச்சடங்கு இன்று மாலை வடக்கனந்தல்கிராமத்தில் நடைபெறும்.

மதிய பட்ஜெட்டை கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்




கண்டன ஆர்ப்பாட்டம் -மத்திய சங்கம் அறைகூவல்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
பெரு முதலாளிகளுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் பட்ஜெட்டில் சலுகை … ஏழை எளிய மக்களுக்கோ பட்ஜெட்டில் சுமை … மத்திய அரசை கண்டித்து  பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடத்திட நமது அகில இந்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ் மாநிலச்சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.மதிய,மாநிலச்சங்கங்களின் அறைகூவலின்படி நமது கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் ௦3.௦3.2௦15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம். இதுகுறித்து நமது மாநிலச்செயலர்வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>
 

ஏப்ரல் 21 & 22 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்-FORUM முடிவு

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
மார்ச்மாதம் 17 முதல் நாம் நடத்தவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டு நாள் வேலைநிறுத்தமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<< Read>>>


BSNLஐ காக்க பாராளுமன்றம் நோக்கிய பேரணி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
BSNL நிருவனத்தை லாபம் ஈட்டும் வகையில் மாற்றிட மத்திய அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்,பொதுத்துறை நிருவனமாகவே பாதுகாத்திட வலியுறுத்தியும் நாடுமுழுவதும் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு கோடி கையெழுத்து படிவங்களை பாரத பிரதமரிடம்  25.௦2.2௦15 அன்று புதுடில்லியில் பிரமாண்டமான பேரணி நடத்தி FORUM சார்பாக வழங்கப்பட்டது.இது குறித்த நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>


ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பாஸ்வேர்டு’ தெரியாததால் பாதுகாப்புத்துறை தப்பித்தது மத்திய அரசின் ஆவணங்களை திருடியவர்கள் அதிர்ச்சித் தகவல்



புதுதில்லி, பிப். 21-
பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடை பெற்ற விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் கள் கிடைத்துள்ளன என்று தில்லி காவல்துறை தலைவர் பாசி தெரிவித்துள்ளார்.இந்த விசாரணையானது வழக் கின் முக்கியத்துவம் கருதி சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. தில்லியின் இணை போலீஸ் கமிஷனர் யாதவ், கூடுதல் கமிஷனர் அசோக் சந்த், துணை போலீஸ் கமிஷனர் பிஷம் சிங்,
உதவி கமிஷனர் மல்ஹோத்ரா மற்றும் போலீஸ் ஆய்வாளர்கள் மற்றும் துணைஆய்வாளர்கள் கொண்ட புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சனிக் கிழமையன்று பத்திரிகையாளர்களிடம் கூறிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை.இந்த வழக்கின் விசாரணையில் திருடப் பட்ட மிக முக்கிய ஆவணங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுபவை.
1. தேசிய எரிவாயு தொகுப்பு குறித்து நிதி அமைச்சரின் பட்ஜெட் பேச்சுக்கான 2 பக்க குறிப்பு;
2. எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தினைச் சேர்ந்த விதேஷ் என்பவர் குறித்த ரகசியம் என்று குறிப்பிடப்பட்ட ஆவணங்கள்;
3. பிரதமரின் முதன்மைச் செயலர் நிபேந் திரா மிஸ்ராவின் கடிதம்;
4. பெட்ரோலிய அமைச்சகத்தின் எண்ணெய் தோண்டும் துறையின் ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டவை மற்றும் எரிவாயு குறித்த மாத அறிக்கை;
5. இலங்கையில் உள்ள வாய்ப்புகள் குறித்த குறிப்பு;
6. அவசரக்கூட்டம் குறித்த ஒரு நோட்டீஸ்; மற்றும்
7. நிலக்கரி மற்றும் எரிசக்தி அமைச்சகங் களிடம் திருடப்பட்ட ஆவணங்கள் என அனைத்தும் திருடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை ரகசியமாக பராமரிக்கப்படுபவை யாகும். இதுபோன்ற எண்ணற்ற ஆவணங்கள் பல காலமாக திருடப்பட்டு ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தரப்பட்டுள்ளன. சில கம்பெனிகள் சாஸ்திரி பவானிலுள்ள கீழ்நிலை ஊழியர் களையே இந்த சட்டவிரோதச் செயலுக்காக நியமித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு கம்பெனிகளின் மூத்த உயர் அதிகாரி களும் அடங்குவர்.
வெள்ளியன்று இரவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த சக்சேனா, ஜூப்லி எனர்ஜி கம்பெனியைச் சேர்ந்த சந்திரா, ரிலையன்ஸ் அடர்க் கம்பெனியைச் சேர்ந்தஆனந்த் , எஸ்ஸார் கம்பெனியைச் சோந்த வினஸ் மற்றும் காய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நாயக் ஆகியோர் உள்ளனர்.இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120(பி)(குற்றச்சதி,)
மற்றும் பிரிவு 411 (மோசடியான முறையில் திருடப்பட்ட பொருளை வாங்கும் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப் பட்டு தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த வழக்கில் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஊழியர் லோகேஷ் என்பவர் தேடப் பட்டு வருகிறார்.
பாதுகாப்புத்துறை தப்பித்தது
பெட்ரோலிய அமைச்சகத்தில் கைதான ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ரகசிய ஆவணங்களை திருடவும் முயற்சித்துள் ளனர். விசாரணையில் அவர்கள், பாதுகாப்புத்துறையின் கணிப்பொறியின் ரகசிய கடவுச் சொல்லை கண்டறிய முடியவில்லை என்று கூறியுள் ளனர். இந்த கூற்று உண்மையா என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சந்தேகிக்கப்படும் தனியார் மின்சாரக் கம்பெனிகளின் உயர் அதி காரிகளின் தொலைபேசி உரையாடல்கள் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
இது வரை 100க்கும் மேற்பட்ட உரை யாடல்கள் பதிவு செய்யப்பட்டு அவை அலசி ஆராயப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் சாதாரணமப்பா...
இதுபோன்று ஆவணங்களை திருடுவது சர்வசாதாரணமான ஒன்று என பெருமுதலாளிகளின் அமைப்பான இந்திய தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.35 விழுக்காடு கார்ப்பரேட் கம்பெனிகள் ஆவணங்களை திருடுவதில் ஈடுபட்டு வருகின்றன. பெட்ரோலிய அமைச்சகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து அமைச்சகத்திலிருந்தும் முக்கிய ஆவணங்களை திருடுவது பல பத்தாண்டுகளாகவே நடைபெற்று வருகிறது என இந்திய தொழிற்கூட்டமைப்பின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்தந்த அமைச்சகங்களின் ஊழியர்கள் மட்டுமல்ல,
அமைச்சகத்திலுள்ள உயர் அதிகாரிகளும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அந்தந்த அமைச்சகங்களின் சில குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரை மாதச் சம்பளம் போன்று கையூட்டைப் பெற்று வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. 
நன்றி தீக்கதிர் 22.௦2.2௦15

தமிழ் மாநில FORUM கூட்ட முடிவுகள் . . .

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
சென்னையில் 20.02.15 அன்று நடைபெற்ற   தமிழ்  மாநில FORUM கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள  முடிவுகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண ..கிளிக் செய்யும்   

சனி, 21 பிப்ரவரி, 2015

சேவைத் துறை தொழிற்சங்கங்களின் வழிகாட்டும் குழு உறுப்பினராக நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தேர்வு-

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
சேவைத் துறை தொழிற்சங்கங்களின் வழிகாட்டும் குழு உறுப்பினராக நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தேர்வுசெய்யப்பட்டுள்ளார் அவரது  பணி சிறக்க நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள். இது குறித்த மாநில சங்கத்தின் சுற்றறிக்கை காண இங்கே   << click >> செய்யவும்

சனி, 14 பிப்ரவரி, 2015

தோழர். S.K.வியாஸ் காலமானார்


தோழர். S.K.வியாஸ் காலமானார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.தோழர்.S.K.வியாஸ் மத்தியரசுஊழியர்களின் ஒரு ஒப்புயர்வற்ற தலைவராகும். அவர் 13.02.2015 அன்றுஇரவு 08.30 மணிக்கு ஜெய்பூர் மருத்துவ மணையில் காலமானார். அவர்சில நாட்களுக்கு முன்பாக இருதய வலி காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது உடல் நலம் தேறிவந்தஅவருக்கு திடிரென உயிர் பிரிந்தது. அவருக்கு தற்போது 85வயதாகிறது. தோழர். S.K. வியாஸ் 1967 முதல் பல ஆண்டுகள் மத்தியஅரசு ஊழியர்களின் கூட்டமைப்பின்Secretary General ஆக திறம்படபணியாற்றிய தலைவராகும். தோழர்.S.K. வியாஸ் அவர்களின் இறுதிசடங்கு ஜோத்பூரில் நடைபெறும். தோழரின் இறப்பு ஈடுகட்ட முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும், தோழர்களுக்கும் நமது கடலூர் மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.தோழர்.S.K. வியாஸ் அவர்களின் மறைவிற்கு நமது செவ்வணக்கம் உரித்தாகட்டும் .

வியாழன், 12 பிப்ரவரி, 2015

நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை - 20

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!! 

 நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் மத்திய சங்கத்தின் பல்வேறு செய்திகள் அடங்கிய  சுற்றறிக்கை எண்  - 20 வெளியிட்டுள்ளது... 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது மாவட்ட உதவிச்செயலர் தோழர் R.V.ஜெயராமன் அவர்களுடைய தாயார் திருமதி சாவித்திரி அம்மாள்(85) இன்று 1௦.௦2.2௦15 காலை 5.௦௦ மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும் நமது இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறோம். நல்லடக்கம் இன்று மாலை 4.௦௦ மணிக்கு கடலூரில் நடைபெறும்.

சனி, 7 பிப்ரவரி, 2015

7.2.2015அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற TNTCWU அமைப்புதின கொடியேற்று நிகழ்ச்சியின் சில காட்சிகள்



கடலூர் பொதுமேலாளருடன் பேட்டி (FORMAL MEETING)

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
05.02.2015 அன்று நமது மாவட்ட நிவாகத்துடன் "FORMAL MEETING" நடைபெற்றது. மாவட்ட செயலருடன் தோழர்கள் A.அண்ணாமலை, G.S.குமார்,S.பரதன் ஆகியோர் பங்கேற்றனர்.நமது பொதுமேலாளரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது.நாம் கொடுத்த ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கும்,  சேவை மேம்பாட்டிற்கும் உரிய  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தோடு பேட்டி நிறைவுற்றது.

தீர்க்கப்பட்டுள்ள பிரச்சனைகள்
 

1)நெய்வேலி ஊழியர்கள் குடியிருப்பில் நீரேற்று மின்மோட்டார் சரிசெய்யப்பட்டுள்ளது மேலும் பைப் லைன் வால்வுகள் மாற்றப்பட்டுள்ளது.
2)தோழர் V.S.பாலாஜி TTA அவர்களுக்கு கண்பர்மேஷன் உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.
3)நமது சங்க அலுவலகத்திற்கு புதிய கணினி வழங்கஉத்திரவிடப்பட்டுள்ளது.

ஏற்கப்பட்டுள்ள நமது கோரிக்கைகள்
1) 31.03.2015 க்குள் சீருடை வழங்கப்படும்.

2) 2௦ சத ஊழியர்களுக்கு முதல் காலாண்டிலும் அடுத்தடுத்த காலாண்டுகளில் முறையே 2௦ சத ஊழியர்களுக்கும் "TOUR BAG" வழங்கப்படும்.

3)கள்ளக்குறிச்சி பகுதியில் கேபிள் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியத்தை ஒப்பந்ததாரரிடமிருந்து பெற்றுக்கொண்டு பட்டுவாடா செய்யாத கள்ளக்குறிச்சி வெளிப்புற அதிகாரிமீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

4)தோழர் K.ராஜேஷ்TTA - G.V.ஸ்ரீதர்TTA மியுச்சுவல் மாற்றல் வழங்கப்படும்.

5)தோழியர் S.சிவகாமி TTA வுக்கு அம்மேரி TO நெய்வேலி தற்காலிக மாற்றல் வழங்கப்படும்
.
6)தோழர் K.மண்ணாங்கட்டி TTA வுக்கு சங்கராபுரம் TO கள்ளக்குறிச்சி மாற்றல் வழங்கப்படும்.

7)தோழர்கள் P.ராஜசேகர் STS கடலூர்,ஜெயச்சந்திரன் TM கடலூர்,நவாப்ஜான் TM கடலூர்,L.சையத்சம்சுதீன் TM சுலாங்குரிச்சி ஆகியோர்களது மருத்துவ பில்கள் பட்டுவாடா செய்யப்படும்.

8)12.௦2.2௦15 அன்று கடலூரில், கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கான " WORKS COMMITTEE" கூட்டம் நடத்தப்படும்.

9)கடலூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் செல் சிக்னல் பிரச்சனைகள் தீர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

1௦)செல்சேவை விரிவாக்கத்திற்காக கள்ளக்குறிச்சி மலையக பகுதிகளான கண்ணூர்,எழுத்தூர்,மணியார்பாலயம்,முண்டியூர்பகுதிகள் பயன்பெறும் வகையில் இரண்டு புதிய BTS கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

11) தரைவழி இணைப்புகள் வழங்கிட கடலூர்,கள்ளக்குறிச்சி,மற்றும் சிதம்பரம் பகுதிகளில் உள்ள TNF அனைத்தும் வழங்கிட அந்தந்த கோட்ட பொறியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

பரிசீலனைக்கு உரியவை
தோழியர் R.ஷீலா TM கடலூர் புதுவை மாற்றல்
தோழர் E.C.கண்ணன் TM மண்மலை அவர்களின்  NEPP

நமது கோரிக்கைகளை பரிவுடன் கேட்டு சட்ட விதிகளுக்குட்பட்டும்,மனிதாபிமான அடிப்படையிலும் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்ட நமது முதுநிலை பொதுமேலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொல்கிறோம்.
                                                                           தோழமையுடன் 
                                                                              K.T.சம்பந்தம்

புதன், 4 பிப்ரவரி, 2015

பாசிசத்தின் இந்திய முகங்கள்



தற்போதைய தேசியவாத கவர்ச்சிச் கோஷங்கள் அனைத்தும் 1930களின் பாசிச வரலாற்றோடு இணைந்தவைகளாக உள்ளன. நரேந்திர மோடி இதை பாரம்பரிய கொடையாக கருதுகிறார். ஆர்எஸ்எஸ் ஒரு பாசிச சக்தி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தனது கைப்பாவையான பிஜேபியின் மீது கடந்த 10 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ்-சின் பிடி மேலும் இறுகியுள்ளது. ஆளுங்கட்சி மீது பாசிசம் செல்வாக்கு பெறும் போது அரசியல் சாசனத்தின் செயல்பாடு சிதைந்து போகிறது. மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு, தலைமையின் மௌனம், சுதந்திரமான நிர்வாகப்பணிகள் மீது தாக்குதல், இப்படி இந்தியாவின் அமைச் சரவை ஆட்சி முறை நொறுங்கிக் கொண்டிருக்கிறது. தனது சிறந்த நூலான `மதச்சார்பற்ற நாடாக இந்தியா’வில் அதன் ஆசிரியர் டொனால்டு ஈஜின் ஸ்மித் இப்படி கூறுகிறார். “ஐரோப்பிய பாசிசத்தின் இந்திய வடிவம்தான் இந்து அடிப்படைவாதம் என நேரு ஒரு முறைகூறினார். ஆர்எஸ்எஸ்க்கும் கொடுந்தேசியவாதத்தை முன்வைக்கும் பாசிசத்திற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. ராணுவவெறிமயமாக்கல், இன கலாச்சார உயர்வுக் கொள்கை மதவெறிபாய்ச்சிய தீவிர தேசியவாதம், பழமைச்சுவடுகளை பயன்படுத்துதல், மத-இன சிறுபான்மை மக்களை தேசியக் கொள்கை களிலிருந்து விலக்கி வைத்தல் இப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ்-இன் இயல்புகள்ஐரோப்பிய பாசிசத்தை நினைவூட்டுகின் றன. ஆட்சி அதிகாரத்தின் மூலம் தனது இலக்கை அடைய முடியும் என்பதை ஆர்எஸ்எஸ் நிராகரிக்கிறது. பதிலாக இந்து சமூகம் தனக்குள்ளிருந்து புத்துயிர்ப்பு பெற்றுஎழுந்து வரவேண்டும் என திட்டமிடுகிறது”. இத்தாலிய ஆராய்ச்சியாளர் மார்ஸியா கசோலாரி எழுதிய “1930களில் இந்துத்வாவின் வெளிநாட்டு த்தொடர்பு” மற்றும் “அரசியலில் இந்து தனித்துவத்தை உருவாக்கு வதில் வாரணாசியின் பாத்திரம்” என்னும்கட்டுரைகளை எக்கானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி வெளியிட்டிருந்தது. மார்ஸியா கசோலாரி “இந்திய தேசியவாதத்திற்கும் நாஜிகளின் பாசிசத்திற்கும் இடையில் உள்ள சந்தேக உறவு” என்னும் நூலையும் எழுதியுள்ளார். “பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள், அலுவலகக் கோப்புகள் மற்றும் சுற்றுக்கு விடப்பட்ட இதர ஆவணங்களில் 1920-லிருந்து1940க்கு இடைப்பட்ட காலக்கட்ட பாசிசத்தின் மேல் இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு ஈர்ப்பு இருந்தது. முசோசலினியின் கட்டுரைகள், அவரது வாழ்க்கை வரலாறு ,கோஷங்கள் இந்தக் குழுக்களுக்குள் சுற்றுக்கு விடப்பட்டன. 1938ல் சாவர்க்கர் தலைவராக இருந்த காலத்தில் நாஜி ஜெர்மனிதான் இந்து மகாசபைக்கு பொருத்தமான முன்னுதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. இனம் தொடர்பான நாஜிகளின் கொள்கைகள்தான் இந்தியாவில் முஸ்லிம் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு கடைப்பிடிக்கப்படவேண்டும் இந்துவெறி அமைப்புகள் இரண்டு முக்கிய அரசியல் பாதைகளை 1920-1940 காலத்தில் தேர்ந்தெடுத்திருந்தன. ஒன்று ஐரோப்பிய பாசிச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த இனம் சார்ந்த கருத்துருவாக்கத்தை போல சக்தியான சொல்லாடல்கள் மூலம் இந்துத்வா நோக்கத்தை உச்சத்திற்கு கொண்டு செல்வது. மற்றொன்று இந்து சமுதாயத்திடம் கட்டுப்பாட்டுணர்வு குறைவாக இருப்பதாக குறிப்பிடும்படியான முயற்சிகள் மூலம் மக்களை நம்பவைப்பது. அவர்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் எதிர்ப்பு இலக்குடன் இந்து சமுதாயம் ராணுவ வெறியூட்டப்படவேண்டும். 1920-களிலிருந்து முஸ்லிம்கள்தான் முதன்மையான இலக்காக கருதப்பட்டு பிரிட்டிஷாரை விட அபாயகரமானவர்கள் என முஸ்லிம்கள் கூர்ந்து கவனிக்கப் பட்டனர்” நூல் நெடுகிலும் மார்ஸியா தனது கருத்தை ஆவணங்களின்வழி கூறுவதில்கவனமாக-நிதானமாக இருந்திருக்கிறார். காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக் கும் பங்கு இருந்தது என உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். கபூர் முடிவுக்கு வந்திருந்தார். இதன் காரணமாகவே ஆர்எஸ்எஸ்- ஜனசங்கத்திற்கும் இடையே கருத்துவேறுபாடு உருவானதாக இட்டுக்கட்டப்பட்டது. இந்தக் கட்டுக்கதையை ஆராய்ச்சியாளர் மார்ஸியா உடைத்தெறிந்துள்ளார்.“கே.பி.ஹெட்கேவாரை தவிர்த்து பி.எஸ்,மூஞ்சே, எல்.வி.பரஞ்சாபி, பாபாராவ் சாவர்க் கர் மற்றும் சிலரைக் கொண்டதுதான் இந்து மகாசபை. ஒரே அரசியல் கொண்ட இந்த ஒரு சிறிய குழுவால் உருவாக்கப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ். ஹெட்கேவார் 1925 இல் சாவர்க்கரை ரத்னகிரி சிறையில் சந்தித்து ஆர்எஸ்எஸ்-ஐ உருவாக்குவதற்கு அறிவுரைகளை கேட்டார்”. பி.எஸ்.மூஞ்சே இந்து மகாசபை-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பாலமாக செயல்பட்டவர். இவர் 19.3.1931 அன்று ரோம் நகரில் முசோலினியை சந்தித்தார். அவரிடம் ஆர்எஸ்எஸ் போல குறிக்கோள் கொண்ட சுதந்திரமான ஒரு அமைப்பை நான் துவங்கியுள்ளேன் என முசோலினியிடம் தெரிவித்தார்.“இத்தாலியில் பாசிஸ்ட்கள் ஜெர்மனியில் நாஜிகளைப் போல இந்தியாவில் எதிர்காலத்தில் உருவாவோம் என இந்துத்வாகருதுவதாக ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அறிக்கை கூறியது. 23.6.1934-ல் நடைபெற்றபம்பாய் இந்து மகாசபை மாநாட்டில் ஆர்எஸ் எஸ்-ஐ உருவாக்கிய ஹெட்கேவாரை பாராட்டியது. ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 பேர் கொண்ட குழுவினை மாநாடு நியமித்தது. அதில் என்.டி. சாவர்க்கரும் என்.சி.கேல்கரும் அடங்குவர்”. இந்து மகாசபைக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் இடையே இருந்த உறவிற்கு இது மேலும் ஒரு ஆவண சாட்சியமாகும். “பம்பாய் மாநாட்டிற்கு பிறகு சாவர்க்கர் ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். இக்கூட்டங்களில் பங்கேற்ற மத தீவிரவாதிகளையும் சாவர்க்கர் வெளிப்படையாக பாராட்டவும் செய்தார். இக்கூட்டங்களில் ஹெட்கேவாரின் பங்கை பாராட்டவும் சாவர்க்கர் தவறவில்லை. 29.7.1939 அன்று புனேயில் குருபூர்ணிமா ஆர்எஸ்எஸ் விழாவில் சாவர்க்கர் உரையாற்றினார். சில ஆண்டுகளுக்கு பிறகு27-29.5.1943 மூன்று நாட்கள் மூஞ்சே தலைமையில் கோல்வால்கர் முன்னிலையில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. சாவர்க்கர் அதில் கலந்து கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி பெருமை பொங்க உரையாற்றினார்”. ஹிட்லரை விமர்சனம் செய்ததற்காக நேருவை சாவர்க்கர் கடுமையான தாக்கிப்பேசியதோடு செக் நாட்டின் சூடன்டெண்லேண்ட் நகரை ஹிட்லர் ஆக்கிரமித்த தையும் அவரது யூதக்கொள்கையையும் ஆதரித்தார். இந்திய முஸ்லிம்கள் அந்த திசைவழியில்தான் நடத்தப்படவேண்டும் என விரும்பினார்.“ஆரியக் கலாச்சாரத்தை புதுப்பிக்கும் பெருமைமிக்க ஜெர்மனியின் கொள்கையை, ஸ்வஸ்திகாவின் புகழை, ஆரியக்கல்விக்கான ஆதரவு மற்றும் இந்திய ஜெர்மானிய கலாச்சாரத்தின் வெற்றியை உணர்வுமிக்க இந்திய இந்துக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்” என 25.3.1939 அன்று இந்து மகாசபை கூறியது. “நேரு தலைமையிலான ஒரு சில சோசலிஸ்ட்டுகள் ஜெர்மனிக்கு எதிரான கோப நீர்க்குமிழிகளை தோற்றுவிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் அது எடுபடவில்லை. ஜெர்மனியின் தவிர்க்கமுடியாத வலிமைக்கு முன்னே மகாத்மா காந்தியின் சாபம் எதுவும் பலிக்காது, ஆரிய கலாச்சாரத்தின் எதிரிகளோடு ஜெர்மனி நடத்தும் புனிதப்போர் உலகமெங்கும் உள்ள ஆரிய இன நாடுகளை சிந்திக்க வைக்கும்”. சங் பரிவாரம் நாட்டின் விடுதலை இயக்கத்தில் பங்கேற்கவில்லை. 9.9.1939 அன்று சாவர்க்கர் வைஸ்ராய் லின்லித்கோவை சந்தித்தார். பிரிட்டிஷ் அரசுடன் ஒரு உடன்பாடு செய்து கொள்ளவிரும்புவதாகத் தெரிவித்தார். “அவர் (சாவர்க்கர்) மாட்சிமை பொருந்திய மன்னர்பிரானின் அரசு இந்துக்கள் பக்கம் திரும்பவேண்டும். அவர்கள் ஆதரவுடன் வேலை செய்யவேண்டும். கடந்த காலத்தில் என்னதான் இந்துக்களுக்கும் நமக்கும் உறவில் பிரச்சனைகள் இருந்தாலும் பிரிட்டன்-பிரெஞ்ச் உறவைப்போல சமீபத்திய நிகழ்வுகள் காட்டும் ரஷ்யா-ஜெர்மனி உறவுகளை போல உண்மையில் சரிசமமானது. இந்துக்கள் பிரிட்டனின் நட்புறவோடு தற்போதைய நமது நலன்கள் பிணைந்துள்ளதால் பழைய பகைமைகள் இனி தேவையில்லை”. மார்ஸியாவின் நூலுக்கான கருத்துரைகள், குறைவாகவும் எல்லைக்குட்பட்டும் முழுநிறைவான ஆவணமாக உள்ளது குறிப்புரைகள் ஆழ்ந்த நோக்கை பிரதிபலிப்பவைகளாக உள்ளன. நூலில் எதிரி என்பதன் கோட்பாடு இந்திய தேசியத்திற்கும் இந்து தேசியத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்குவதாக உள்ளது. முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரசின் இந்திய தேசியம் என்பதன் கருத்தெல்லை பிரிட்டிஷாரை எதிரியென நிறுத்துவதற்குரியதாக இருந்தது. 1930களில் காங்கிரசை விட்டு விலகி தனது தனிப்பட்ட கொள்கைகளை முஸ்லிம் லீக் உருவாக்கத்துவங்கியது. தனக்கென ஒரு நாட்டின் திட்டத்தையும் உருவாக்கிவளர்க்கத் தொடங்கியது. ஆயினும் இந்தக்கொள்கைகள் சகோதரப்படுகொலையை ஆதரிக்கவில்லை. அதே சமயத்தில் முஸ்லிம்களுக்கான தனிநாடு உருவாவது இந்துக்களின் எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சரியோ தவறோ இந்திய முஸ்லிம்களின் நலன்களை எடுத்துக்கூறும் கொள்கை பலவீனத்திற்கான பரிகாரமாகத்தான் புதிய நாடு உருவாவதை அவர்கள் கண்டனர். சங்பரிவாரத்தின் அடாவடித்தனமான முஸ்லிம் எதிர்ப்புப் பேச்சுக்கள் ஒரு வன்முறைச் சூழலை உருவாக்கியதோடு முஸ்லிம் குழுக்கள் மத்தியில் பிரிந்துசெல்லும் மனநிலையை வளர்த்தன. நாடு முழுவதும் தனி நாடு அறைகூவலை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பியது. இந்தப் பிரிவினைக்கு சங்பரிவாரமும் காங்கிரஸ் கட்சியிலிருந்த அதன் அனுதாபிகளும்தான் பொறுப்பாகும். 4.11.1948 அன்று டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் சாசன வரைவை முன்மொழிந்து பேசும்போது அரசின் நிர்வாக அமைப்பு அரசியல் சாசனத்தோடு நெருங்கிய தொடர்புள்ளது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டார். அரசு நிர்வாக முறை என்பதன் புரிதல் அரசியல் சாசனத்தின் உன்னத நெறிகளின் மிகச்சரியான புரிதலோடும் இணைந்திருக்க வேண்டும். வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால் அரசியல் சாசன விதிகளை திருத்தாமலே நிர்வாக முறையில் மாறுதல் செய்வதன் மூலம் அரசியல் சாசன விதியை பொருத்தமாற்ற தாக்கி சிதைத்து அதன் சாரத்திற்கு எதிராகமாற்றிவிடவும் முடியும். நரேந்திர மோடி உள்பட 19 மத்திய அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் பின்னணியில் உள்ளனர். இந்து ராஜ்யத்தை ஏற்படுத்த இவர்கள் அரசியல் சாசனத்தை திருத்தவேண்டியதில்லை. சங்பரிவாரத்தின் ஒரு குரு சியாமா பிரசாத் முகர்ஜி இவர்களுக்கு ஒரு பாதையையும் காட்டியுள்ளார். 6.1.1946 தேதியின்அவரது நாட்குறிப்பில் “75 சதம் இந்துக்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் விரும்பினால் ஜனநாயக வடிவ அரசை ஏற்க முடியும். அதில் முக்கிய பாத்திரத்தையும் வகிக்கமுடியும்”. இதுதான் பெரும்பான்மைவாதம் என்பது. தொடர்ந்து நிர்வாக ஆணைகளின் மூலம் மதச்சார்பின்மை கோட்பாட்டை கிழித்தெறிந்துவிட்டு புதிய சூழ்நிலையை உருவாக்க முடியும். அரசு நிர்வாகத்தின் வடிவம் மாற்றப்பட்டு வருகிறது. அதே வேளையில் அரசியல் அமைப்புச் சட்டம் இப்போது தாக்குதலுக்குள்ளாகியும் இருக்கிறது. நன்றி: பிரண்ட்லைன் 23.1.2015தமிழில் சுருக்கம்: ப.தெட்சிணாமூர்த்தி

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

வந்தாருய்யா வந்தாரு... ஒபாமா அய்யா வந்தாரு!

c



ஒபாமா இந்தியா வந்துவிட்டுப் போய் ஒரு வாரத்துக்கு மேலாகியும் பரபரப்பு இன்னும் ஓயவில்லை. பரபரப்பைக் கிளப்புவதற்கு நோபல் பரிசு ஏதேனும் இருந்தால் அதைப் பெற எல்லாத் தகுதியும் உடைய நரேந்திர மோடி விட்ட ராக்கெட்டல்லவா? ஜன்தன் யோஜனா, ஸ்வச் பாரத் போன்ற அவரது அதியற்புத சாதனைகள் வரிசையில் ஒபாமா விஜயமும் சேர்க்கப்பட்டுவிட்டது. இவர் அவரை `பராக்’ என செல்லமாக அழைக்க, அவர் இவரை `சாயாவாலா’ எனப் பிரியமுடன் விளிக்க.. பள்ளி நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொண்டதுபோல் அவர்களிடையே பாசமழை பொழிய, இந்தியாவே விக்கித்து நின்றது.ஆனாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்ற பாடலைக் கொள்கையாக வரித்துக்கொண்ட அமெரிக்க அதிபர்கள் தங்கள் நாட்டுத் தேவைகளை ஒரு கணமும் மறப்பார்களா? ஒபாமாவும் மோடியும் தனிமையில் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது பரம ரகசியம். அதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட நமது நிருபர் அதை இங்கே பிட்டுப் பிட்டு வைக்கிறார். வேறு ஊடகங்களில் வராத உரையாடல் இது.

ஒபாமா : மேட் இன் அமெரிக்கா என்பது உலகம் பூரா ஏற்றுக் கொண்ட பொருளாதாரம். நீங்க என்ன புதுசா மேக் இன் இந்தியான்னு கரடி விடறீங்க? எங்களைச் சீண்டிப் பாக்கறீங்களா? மோடி : அய்யய்யோ! அப்படி ஏதும் தப்புக்கணக்குப் போட்டுராதீங்க.. நான் ஏன் `மேட் இன் இந்தியா’ன்னு சொல்லாம`மேக் இன் இந்தியா’ன்னு சொல்றேங்கறதை நீங்க கவனிக்கணும். நீங்க எங்களுக்காகத் தயாரிச்ச பொருள் எதுவானாலும் அதை மேக் இன் இந்தியான்னு நாங்க சொந்தம் கொண்டாடிக்குவோம். கண்டுக்காதீங்க ஒபாமா : வெரி குட்! இதை அப்படியே மெயின்டைன் பண்ணிக்குங்க.. அமெரிக்காவுல தயாரிச்ச அணு உலைகள் ஏராளமாக் கிடக்கு. அங்கே யூஸ் ஆகாது. இந்தியாவுக்குக் கப்பல்ல ஏத்தி அனுப்பத் தயாரா வச்சுட்டுத்தான் கிளம்பினேன். உங்களை ஒரு வார்த்தை கேட்டுட்டு ஏத்த வேண்டியதுதான்.. மோடி: என்ன வார்த்தையெல்லாம் சொல் றீங்க .. என்னை ஒரு வார்த்தை கேக்கணும்னு சொன்னதே போதும். அந்தப் பெருந்தன்மையைப் பாத்து நான் பூரிச்சுப்போய் நிக்கறேன். ஒரு ரிக்வெஸ்ட். அணு உலை மேலே `மேட் இன் அமெரிக்கா’ன்னு எழுதிட வேணாம். இங்கே அனுப்புங்க. நான் `மேக் இன் இந்தியா’ன்னு எழுத ஏற்பாடு பண்ணிக்கறேன். ஒபாமா : அணு உலையிலே விபத்து ஏதும் நடக்காதுன்னு காரண்ட்டி, வாரண்ட்டி ஏதும் நான் கொடுக்க முடியாது. ஒரு வேளை விபத்து ஏதும் நடந்தா எங்களை எதுவும் நீங்க கேக்கக் கூடாது. அதை எப்படி சமாளிக்கறதுங்கறது உங்க கவலை! மோடி : கவலையை விடுங்க! எங்க பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள்லாம் எதுக்கு இருக்கு? அவங்க கிட்ட பாலிசி எடுத்துக்கறோம். மிச்சம் மீதி துண்டு விழுந்தா, கவன்ர்மெண்ட் ஃபண்ட்லேருந்து கொடுத்துக்கறேன். எங்க நாட்டுப் பாரம்பரியம் ஒண்ணு இருக்கு. பெரிய விபத்திலே சிக்கிக்கிட்டவங்களுக்கு நஷ்ட ஈடு எதுவும்நாங்க கொடுக்கறதில்லே. நஷ்டஈடு கேட்டுக்கேட்டுப் போராடி ஒவ்வொருத்தரா சாகறவரை நாங்க அப்படியே விட்டுருவோம். போபால் படுகொலையிலே, சாரி, விபத்துலே, அதை நாங்க நிரூபிச்சுக் காமிச்சிருக்கோம்.ஒபாமா : வெரி குட், வெரி குட்! கீப் இட் அப்! இன்னொரு விஷயம். அணு குண்டு தயாரிக்க மாட்டோம்னு நீங்க சொன்னாப் போதாது. அதை நாங்க அப்பப்ப வந்து இன்ஸ்பெக்ட் பண்ணணும்...மோடி : இதை நாங்க வெளியே சொன்னா என் இமேஜ் என்ன ஆறது? நீங்க நேரடியா வந்து இன்ஸ்பெக்ட் பண்ண வேணாம். உங்களுக்கு நம்பிக்கையா உள்ள வேற யாரையாவது அனுப்புங்க. நான் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன். ஒபாமா : ஓகே, ஓகே! அடுத்தது, குஜராத் பாணி படுகொலைகளை நீங்க அடியோட மறந்துரணும். மதக்கலவரம் ஏதாவது நடந்தா எங்க வியாபாரம் பாதிக்கும். அண்டர்ஸ்டாண்ட்? மோடி : அடி மடியிலேயே கை வைக்கறீங்கறீங்களே! முஸ்லிம்கள், கிறிஸ்தவங்க மேலே அப்பப்ப வெறுப்பைக் கிளப்பிவிட்டாதான் நாங்க இந்து ஓட்டுக்களைத் தக்க வச்சுக்க முடியும். உலகத்திலே எங்கயாவது சண்டை நடந்துக்கிட்டிருந்தாத்தானே உங்க ஆயுதங்களை நீங்க விக்க முடியுது? அது மாதிரிதான் இது. ஒபாமா : புரியுது, புரியுது.. நாங்க உலக சமாதானத்தைப் பத்தி பேசற மாதிரி, நீங்க மதநல்லிணக்கம் பத்தி பேசிக்கிட்டே உங்க வேலையைப் பாருங்க. அதே சமயம் எங்க வியாபாரம் பாதிக்காமயும் பாத்துக்குங்க.மோடி : எப்பப்ப எந்த வேஷம் போடணும்கறதிலே நாம ரெண்டு பேருமே கில்லாடிங்கதானே? சமாளிப்போம்! ஒபாமா : அப்ப நான் போய்ட்டு வரேன். அமெரிக்கத் தொழிலதிபர்கள் இன்னும் மூணுநாளைக்கு இங்கே இருப்பாங்க. அவங்களை மனம் குளிர, சந்தோஷமா அனுப்பிவைக்க வேண்டியது உங்க பொறுப்பு. விவசாயத்துக்கு நாங்க மானியம் கொடுக்கற மாதிரி நீங்களும் கொடுக்கணும்னு நினைக்காதீங்க. நாங்க வேற.. நீங்க வேற.. அதை மறந்திராதீங்க. மோடி: மறப்பேனா? இங்கே பேசினதெல்லாம் நம்மோட இருக்கட்டும். வெளியே போகும்போது சிரிச்சுக்கிட்டே போஸ் குடுக்கணும். நான் உங்க தோள்மேலே கைபோட்டுக்கிட்டே வருவேன். தப்பா நினைக்கக் கூடாது. மத்ததை நான் பாத்துக்கறேன்.(இருவரும் சிரித்தபடியே வெளியே வருகின்றனர்.)---தீக்கதிர்.








எழுச்சிகரமான கடலூர் கருத்தரங்கம்

 எழுச்சிகரமான கடலூர் கருத்தரங்கம் , மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

கடலூர் கருத்தரங்கத்தின் சில காட்சிகள் பார்க்க :-Click Here

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

அரகண்டநல்லூர் பகுதியில் நம்மோடு இணைந்த தோழர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.மாவட்ட சங்கத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
அரகண்டநல்லூர் பகுதியில் நமது கிளைச்சங்கத்தில் கீழ்கண்ட தோழர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.புதியதாக இணைந்துள்ள அனைவரையும் மாவட்ட சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.

தோழர் D.பொன்னம்பலம் TM
தோழர் R.தினகரன் TM
தோழர் K.குமார் TM
தோழர் R.ஏழுமலை  TM
தோழர் C.வனத்தையன் TM
தோழர் R.சுந்தரமூர்த்தி TM
                                                                                      தோழமையுடன் 
                                                                                      K.T.சம்பந்தம் 
                                                                                        மாவட்டசெயலர்