சனி, 7 மார்ச், 2015

அம்பானியை பின்னுக்கு தள்ளிய புதிய பணமுதலை


நாட்டின் மிகப்பெரிய பணக்காரராக `சன் பார்மா’ மருந்து கம்பெனி அதிபர் திலீப் சாங்வி அவதாரம் எடுத்துள்ளார். முகேஷ் அம்பானியை அவர் பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளார்.திலீப் சாங்வியின் சொத்து மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 40ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. முகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 30ஆயிரம் கோடியாகும்.
நவீன தாராளமயக் கொள்கைகளால் சாங்வி, அம்பானி, அதானி போன்ற பகாசுர முதலாளிகளின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் நாட்டின் செல்வ செழிப்புக்கு அடித்தளமாக இருந்து வரும் விவசாயிகள் ஏனைய உழைக்கும் மக்கள் வறுமையிலும், ஏழ்மையிலும் சிக்கித் தவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: