செவ்வாய், 9 டிசம்பர், 2014

கடலூர் மாவட்ட FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !!
     8.12.2014 அன்று மாலை, கடலூர் FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS கூட்டம் BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது. FORUM தலைவர் தோழர் R.ஸ்ரீதர் தலைமையேற்றார்.கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் FORUM விடுத்துள்ள அறைகூவல்களை எடுத்துரைத்தார்.இதில் பங்கேற்ற SNEA(I) மாவட்ட செயலர் தோழர் C.பாண்டுரங்கன், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் P.வெங்கடேசன், தோழர் பால்கி SNEA(I), தோழர்கள் A.அண்ணாமலை,R.V.ஜெயராமன்,S.பரதன் BSNLEU ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக  பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

11.12.2014 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டம் நடத்துவது.

11.12.2014 அன்று காலை விழுப்புரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்ட செயலர்களும் பங்கேற்பது.

11.12.2014 அன்று மதியம் கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட சங்கங்களின் சார்பில் அழைப்பு விடுப்பது.

மக்கள் சந்திப்பு இயக்கத்தினை திட்டமிட மீண்டும் FORUM கூட்டத்தினை கூட்டுவது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக்கிட அனைத்து சங்க கிளை,மாவட்ட நிவாகிகள் இணைந்து பணியாற்றுமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
                                                    தோழமையுள்ள 

   K.T.சம்பந்தம்      R.ஸ்ரீதர்       R.ஜெயபாலன்   C.பாண்டுரங்கன்  P.வெங்கடேசன் 
        BSNLEU           NFTE(BSNL)            FNTO                     SNEA(I)              AIBSNLEA

கருத்துகள் இல்லை: