ஞாயிறு, 17 நவம்பர், 2013

குழந்தைகள் தினவிழா

அன்பார்ந்த தோழர்களே !
        கடலூர் மாவட்ட BSNL  நிர்வாகத்தின்  சார்பில் 14-11-2013 அன்று மாலை அரசு சேவைஇல்லத்தில் சமுக நலத்துறையுடன் இணைந்து குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. நமது முதுநிலை பொதுமேலாளர் தலைமையேற்று சிறப்பு செய்தார். மேலும்  BSNL  நிர்வாகத்தின்  சார்பில் நலத்திட்ட உதவிகளை சேவை இல்லத்திற்கு வழங்கினார். மிதிவண்டி, எமர்ஜென்சிலேம்ப், சமையல்உபகரணங்கள், நோட்டு புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிஸ்கட் வழங்கப்பட்டது. விழாவில் துணைப்பொதுமேலாளர்கள் நிதி, நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . தொழிற்சங்கத் தலைவர்கள் தோழர் R.ஸ்ரீதர், தோழர் P.வெங்கடேசன், தோழர் T.ராமலிங்கம் ஆகியோர்    கலந்துகொண்டு சிறப்பித்தனர். நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம்,திண்டிவனம் தோழர் S.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். SDE மார்க்கெட்டிங் P. சிவக்குமரன் நன்றியுரை ஆற்றினார். சிறியஅளவில் இருந்தாலும் நல்ல முடிவு எடுத்து  மிகக்குறைந்த கால அவகாசத்தில்  சிறப்பான ஏற்பாடுகளை செய்த மார்கெட்டிங் பிரிவிற்கு  நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.


கருத்துகள் இல்லை: