வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஒப்பந்த ஊழியர் ஊதியத்தை முறைப்படுத்திட நமது மாநில சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இணங்க நெய்வேலியில் நடைபெற்ற கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்






ஒப்பந்த ஊழியர் ஊதியத்தை முறைப்படுத்திட நமது மாநில சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இணங்க கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்





ஒப்பந்த ஊழியர் ஊதியத்தை முறைப்படுத்திட நமது மாநில சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இணங்ககடலூரில் நடைபெற்ற கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்



வியாழன், 22 ஜனவரி, 2015

நமது மாநில சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இணங்க விழுப்புரத்தில் நடைபெற்ற கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்





விருத்தாச்சலத்தில் 20.01.2015 அன்று எழுச்சியோடு துவங்கியது கையெழுத்து இயக்கம்


ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய பிரச்சினையில் பாராமுகமாக இருக்கும் மாநில நிவாகத்தை கண்டித்து கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம் அனைவரும் பங்கேற்று வெற்றிபெறச் செய்வீர் !


திங்கள், 19 ஜனவரி, 2015

கிளை செயலர்கள் கூட்டம் - 21-01-2015 அன்று மாலை தவறாமல் பங்கேற்ப்பீர்


அன்பார்ந்த தோழர்களே !..
                   21-01-2015 அன்று மாலை 5:00 மணிக்கு   கிளை செயலர்கள் கூட்டம்  மாவட்டத் தலைவர் தோழர் A.அண்ணாமலை அவர்களின் தலைமையில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். அனைத்து  கிளைச் செயலர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                                             தோழமையுடன்
                                                                                                 K.T. சம்பந்தம்


கையெழுத்து இயக்கம் – நெய்வேலி 12-01-2015



நெய்வேலி இந்திரா நகர் ஆர்ச் கேட் அருகில் NFTE மாநில துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.நமது கிளைச்செயலர் தோழர்.N.மூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.கூட்டமைப்பின் கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் அறிமுக உரையாற்றினார்.வடகுத்து ஊராட்சி மன்றத்தலைவர் திரு.ஜெகன் அவர்கள் முதல் கையெழுத்து இட்டு வாழ்த்துரை வழங்கினார்.மேலும் திரு.ஆனந்தஜோதி, இந்திராநகர் ஊராட்சி தலைவர்,தோழர்..சங்கிலிபாண்டியன் தலைவர்CITU, தோழர்.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர்AITUC, திரு.சிவராமசேது,ஊராட்சிமன்றத்  தலைவர்
குருவம்பேட்டை, திரு.மோகன்- ஊராட்சி மன்றத் தலைவர் நைனார்குப்பம், தோழர்.குப்புசாமி- CPM மாவட்டக்குழு, திரு.மணிவேல் பெரியார் கழகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர்கள் P.வெங்கடேசன் AIBSNLEA மாவட்டச்செயலர், ஜெயராமுலு SNEA கிளைசெயலர், NFTE மாவட்டத் தலைவர் R.செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.70க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டுசிறப்பித்தனர்.NFTE கிளைச்செயலர் தோழர். E.அப்துல்லா நன்றி உரையாற்றினார்















                                                                                         

செவ்வாய், 13 ஜனவரி, 2015

திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

BSNL –SIM தட்டுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி நமது மாநில சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இணங்க ஆர்ப்பாட்டம்







ஆர்ப்பாட்டம்

தோழர்களே! தோழியர்களே!!
          நமது தமிழ் மாநிலத்தில் நிலவும் BSNL –SIM தட்டுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி நமது மத்திய சங்கம் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே சிம் தட்டுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி நமது மாநில சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இணங்க  நமது கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


13-01-2015 மதியம் 01:00 மணியளவில் பொது மேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்

வியாழன், 8 ஜனவரி, 2015

இரங்கல் செய்தி !

கடலூர் தொலை தொடர்பு மாவட்டத்தின்  CM WING  & TRANSMISSION WING  உதவி பொது மேலாளர்  திருG.குப்புசாமி அவர்கள் நேற்று (07/12/2015) இரவு 12.00 மணியளவில் இயற்கை எய்தினார். மிக சிறப்பாக பணியாற்றி நற்பெயரை பெற்ற அதிகாரியாக விளங்கிய அவரது மறைவு இலாக்காவுக்கு பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.


தர்ணா போராட்டம் - கடலூர்- 07-01-2015