வெள்ளி, 17 ஜூன், 2016

மாநிலச்சங்கதின் சுற்றறிக்கை எண்:103

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
NO VRS-BSNL சேவைகளின் முன்னேற்றம்- BSNL CMD அறிவிப்பு மற்றும் சில மத்திய சங்க செய்திகள் குறித்து நமது  மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக்செய்யவும்<<<Read >>>

TTAக்கள் கேரளா மற்றும் சென்னை மாற்றல்

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் கடும் முயற்சியின் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் சென்னை தொலைபேசிக்கு 10 TTAக்களுக்கு மாற்றல் உத்தரவினை தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது.உத்திரவைக்காண  இங்கே கிளிக் செய்யவும்.<<<Read>>>

எழுச்சிகரமான மாவட்டச் செயற்குழு

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
நமது மாவட்டச் சங்கத்தின் செயற்குழு திருக்கோயிலூரில் 03-06- 2016 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. அரகண்டநல்லூர் கிளை பொறுப்பேற்று செயற்குழுவை அனைவரும்பாராட்டும்படி நடத்திக் காட்டியது. மேலும் செயற்குழுவைத் தொடர்ந்து அரகண்டநல்லூர் BSNLEU மற்றும் TNTCWU கிளைகளின் 8வது இணைந்த மாநாடும் நடைபெற்றது.
 துவக்க நிகழ்ச்சியாக தேசியக் கொடியை அரகண்டநல்லூர் கிளையின் தோழர்R.ராஜேந்திரன் STM எற்றி வைத்தார். BSNLEU சங்கக்கொடியை நமது மாநிலச் செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்னன் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். பின்னர் தோழர்A.அண்ணாமலை மாவட்டத் தலைவர் தலைமை தாங்க செயற்குழு துவங்கியது. வரவேற்புரைஅரகண்டநல்லூர் கிளைச் செயலர் தோழர் D.பொன்னம்பலம் நிகழ்த்தினார். அஞ்சலி உரையை தோழர் R.V. ஜெயராமன் வாசிக்க அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மௌன அஞ்சலிசெலுத்தினர். பின்னர் தோழர் K.T.சம்பந்தம் மாவட்டச் செய்லர் 7 வது சரிப் பார்ப்பு தேர்தலில் நமது மாவட்டச் சங்கம் ஆற்றிய பணிகள் மற்றும் நமது மாவட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து பரீசலனை அறிக்கை வைத்து விவாதத்தை துவக்கி வைத்தார். கிளைச் செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் அறிக்கை மீதான விவாதத்தை நடத்தினர். விவாதத்தின் மீதானதொகுப்புரையை மாவட்டச் செயலர் ஆற்றினார்.
     தோழர் S.முத்துகுமரசாமி மாவட்டச் செயலர் AIBDPA அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நமது மாநிலச்செயலர்  தோழர் A.பாபு ராதாகிருஷ்னன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் 7வது சரிபார்ப்புத் தேர்தலில் நமது சங்கம் அகில இந்திய அளவில் நாம்  பெற்ற வெற்றி என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் எந்த ஒரு பொதுத் துறையிலும் எந்த ஒரு தொழிற்சங்கமும் 6 வது முறையாக தொடர் வெற்றி பெற்றதில்லை.BSNLEU இத்தகைய வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம் ஊழியர் பிரச்சினைகளிலும் நிறுவனத்தை லாபகரமாக நடத்துவதகான போராட்டத்தையும் நமது சங்கம் தொடர்ந்து நடத்தி வருவதே காரணமாகும் என்று குறிப்பிட்டார். பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தோழர்  V.குமார் மாவட்டப் பொருளாளர் அவர்கள் நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது. 
தீர்மானங்கள் 
1) ஜுன் மாத இறுதிக்குள் டெலிகாம் டெக்னீசியன் சுழல் மாற்றலை மாவட்ட நிர்வாகம் அமுல்படுத்திட வேண்டும்.
2) கடலூர் மாவட்டத்தில் BSNL சேவை மேம்படவும்,பழுதில்லா சேவையினை உத்திரவாதப் படுத்திடவும்,மேலும் நமது  நிறுவனத்தின் வருமானம் பெருகிடவும் நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிடும்.
3)நெய்வேலி துணைக் கோட்டத்தில் இந்திராநகர் பகுதியில் திட்டமிடப்பட்ட புதிய தொலைபேசி நிலைய நிர்மாணப் பணிகளை விரைந்து முடித்திட இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
4)ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதிமாதம் ஏழாம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
5)ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலமாக அடையாள அட்டை வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6)கடலூர் CSC உள்ளிட்ட பல பகுதிகளில் வேலை செய்த நாட்களுக்கு மறுக்கப்பட்ட ஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு மேலும் தாமதமின்றி  வழங்கிட வேண்டும்.
7)ஒப்பந்த ஊழியர்களைக் குறைத்தால் நிறுவனம் லாபம் அடைந்துவிடும் என்ற நிர்வாகத்தின் நிலைபாட்டினை BSNL ஊழியர் சங்கம் ஏற்காது. நிரந்தர ஊழியர்கள் கொத்துக்கொத்தாய் பணிஓய்வு பெற்றுவரும் இக்காலகட்டத்தில் நிர்வாகத்தின் இத்தகைய நிலைப்பாடு, சேவையை பெருமளவிற்கு பாதிக்கும்  என்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
8)மிக நீண்டநாட்களாக தீர்வடையாமல் இருக்கின்ற ஊழியர் பிரச்சனைகளை  மேலும் தாமதமின்றி மாவட்ட நிர்வாகம் தீர்த்து வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.நிவாகத்தின் போக்கில் மாற்றமில்லை எனில் போராட்டப்பாதையை தேர்வு செய்திடும் அதிகாரத்தை மாவட்ட செலகத்திற்கு இச்செயற்குழு வழங்குகிறது.
9)கிளை  மாநாடு நடத்தி ஓராண்டு முடிந்த அனைத்து கிளைசங்கங்களும் ஜுலை 2016 க்குள் கிளைமாநாடுகளை கட்டாயம் நடத்தி முடிக்க வேண்டும். அவ்வாறு நடத்தவில்லை என்றால் மாவட்டச்சங்கமே அதற்கான அறிவிப்பை வெளியிட்டு நடத்தும். 
10)கடலூர் GM(O) மற்றும் கடலூர் EXTL கிளைகள் நிர்வாக அமைப்பின்படி புனரமைக்கப்படும்.   
தோழர்களே மேற்கண்ட முடிவுகளை  முழுமையாக அமுல்படுத்திடு மாறு  தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                                 தோழமையுள்ள 
                                                                             K.T.சம்பந்தம் 
                                                                               மாவட்ட செயலர் 

வியாழன், 26 மே, 2016

மீண்டும் வேதாளம்…….

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
BSNL நிறுவனத்தை லாபமடையச் செய்ய VRS திட்டம் அவசியமாம்- CMD BSNL சொல்கிறார் இதுபற்றிய நமது நிலைபாடுகள் குறித்தும் மேலும் சில செய்திகளை தொகுத்து மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக்செய்யவும்<<<Read>>>

திங்கள், 23 மே, 2016

மத்திய, மாநில சங்க செய்திகள்

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
தற்போதைய மத்திய சங்க  செய்திகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்101ஐக் காண இங்கேகிளிக் செய்யவும்.<<<Read >>>

வெள்ளி, 13 மே, 2016

டபுள் ஹாட்ரிக் வெற்றி !!!

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!


10.05.2016 அன்று நடைபெற்ற ஏழாவது சங்க அங்கீகார தேர்தலில் நமது BSNL ஊழியர் சங்கம் ஆறாவது முறையாக மகத்தான தொடர் வெற்றியினை ஈட்டியுள்ளது. இவ்வெற்றி டபுள் ஹாட்ரிக் வெற்றியாகும். 

இந்த மகத்தான தொடர் வெற்றியினை வாக்குகள் மூலம் நமக்களித்த அனைத்து தோழர், தோழியர்களுக்கும், வெற்றிக்கு அயராது பாடுபட்ட அகிலஇந்திய, மாநில, மாவட்ட, கிளைச்சங்க நிர்வாகிகளுக்கும் நமது மனமார்ந்த இதயம் கனிந்த நன்றி!..நன்றி!!நன்றி!!!

அகில இந்திய அளவில்

அகிலஇந்திய அளவில் உள்ள 35 மாநிலங்களில் 27 மாநிலங்களில் BSNL ஊழியர் சங்கம் முதன்மைச் சங்கமாக வெற்றி பெற்றுள்ளது.7 மாநிலங்களில் NFTE வெற்றி பெற்றுள்ளது.ஒரு இடத்தில்(கார்பரேட் அலுவலகம்) FNTO முதன்மை பெற்றுள்ளது.

BSNLEU சங்கம் பெற்ற வாக்குகள் ...........81195
NFTE சங்கம் பெற்ற வாக்குகள் ................52367
     வாக்கு வித்தியாசம் ...............28828


மாநில அளவில் 


BSNLEU சங்கம் பெற்ற வாக்குகள் ...........4967
NFTE சங்கம் பெற்ற வாக்குகள் ................5584

            வாக்கு வித்தியாசம் ...............617

கடலூர் மாவட்டத்தில் 

மொத்த வாக்குகள்............... 762
பதிவான வாக்குகள்.............759
பதிவாகாத வாக்குகள் ...........3
செல்லாதவை ..........................5

BSNLEU  .................................218
NFTE .......................................482
FNTO .........................................43
இதர சங்கங்கள் பெற்றவை ... 11

செவ்வாய், 10 மே, 2016

நெஞ்சார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
10.05.2016 அன்று நடைபெற்ற 7-வது சங்க அங்கீகார தேர்தலை நமது கடலூர் மாவட்டத்தில் அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்திட ஏற்பாடுகளைச்செய்த நமது மாவட்ட நிர்வாகத்திற்கும்,முழ ஈடுபாட்டுடன் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், கடமை உணர்வுடன் ஆர்வத்தோடு வாக்களித்த அனைத்து தோழர்-தோழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறோம். 
 வாக்குப்பதிவின் விபரம்  
 வாக்குமையத்தின்             பெயர் 
      மொத்த                வாக்குகள் 
 பதிவான வாக்குகள் 
 சதவீதத்தில் 
 கடலூர் 
 224
 223
 99.55 %
 விழுப்புரம் 
 153
152 
99.3% 
 கள்ளக்குறிச்சி
51 
51 
100 %
 விருத்தாச்சலம்
69 
68 
98.6%
 சிதம்பரம்
 96
 96
 100%
 திண்டிவனம்
78 
78 
100 %
 நெய்வேலி
91 
91 
100 %
 மொத்தம்
762 
759 
99.6 %

வெள்ளி, 6 மே, 2016

அன்பார்ந்த தோழர்களே !
வாக்களிக்க செல்லும் முன் கவனிக்க வேண்டியது

நமது அடையாள அட்டையை (BSNL Identity Card) கண்டிப்பாக ஒவ்வொருவரும்எடுத்து வரவேண்டும். அப்பொழுது தான் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.

அடையாள அட்டையில்லாதவர்கள் தங்கள் பகுதி அதிகாரியிடம் அத்தாரிட்டி கடிதத்தில் தங்களது புகைப்படத்தை ஒட்டி கையொப்பம் வாங்கி வரவேண்டும்.
கிளைச்செயலர்கள் கவனத்திற்கு
அனைத்து உறுப்பினர்களையும் அணுகி அடையாள அட்டையை சரிபார்க்கவும்.அடையாள அட்டையில்லாத தோழர்களுக்கு தேவையான அத்தாரிட்டி கடிதம்பெற்றுத்தர உதவவும்.(Letter of Authority) அத்தாரிட்டி கடிதம் நகல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

அதனை நகல் எடுக்க இங்கே கிளிக் செய்யவும்.

திங்கள், 2 மே, 2016


இரங்கல் செய்தி

தோழர்களே , தோழியர்களே ..

கள்ளகுறிச்சி கிளை பொருளர் தோழர்.S.V.விஸ்வநாதன் அவர்கள், மற்றும் TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர்.S.V.பாண்டியன் ஆகியோரின் தந்தை தோழர்.S.வீரமுத்து,  அவர்கள் இன்று காலை (02.05.2016)  இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


அவரைப் பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதி ஊர்வலம் இன்று 02.05.2016 மாலை, கள்ளகுறிச்சி அருகில் உள்ள தடையம்பட்டில் இருந்து  நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஞாயிறு, 1 மே, 2016

மே தின நல் வாழ்த்துக்கள்.

8மணி நேரம் வேலை, 8மணி நேரம் ஒய்வு, 8மணி நேரம் உறக்கம் கேட்டு சிக்காக்கோ வீதியில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகள் நினவைப் போற்றுவோம் 130 வது மேதின புரட்சிகர நல் வாழ்த்துக்கள்.












BSNL ஊழியர் சங்கத்தின் மீது SEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்