வியாழன், 3 செப்டம்பர், 2015

பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி!!!!!

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

        செப்டம்பர் 2 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் 15 கோடி தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய நாட்டை ஸ்தம்பிக்க வைத்த இப்போராட்டத்தில் கடலூர் மாவட்ட BSNL ஊழியர்கள் 768 பேரில் 546 தோழர், தோழியர் பங்கேற்று வெற்றிபெறச் செய்துள்ளனர். 65 பேர் விடுப்பில் சென்றனர்.157 பேர் மோடி அரசாங்கத்திற்கு இராஜவிசுவாசம் காட்டிட பணியாற்றினார்கள். வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைவரையும் BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில்  நெஞ்சார பாராட்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: