செவ்வாய், 31 டிசம்பர், 2013

தோழர்.P.அபிமன்யு அவர்கள் பணிநிறைவு சிறக்கட்டும்



1975 ஆண்டு துவக்கத்தில் தபால் தந்தி துறையில்

தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்து

தொழிற்சங்க இயக்கத்தில் NFPTEயில் இணைந்து

அமரர் தோழர் K.G. போஸ் வழி காட்டலில் இயங்கி

தோழர் C.S .பஞ்சாபகேசன் போட்ட பாதையில் நடந்து

தொலைதொடர்பு துறைதொழிற்சங்கங்களில் 
சீர்திருத்தவாத தலைமைக்கு எதிராக போராடி, 

சங்கத்தில் தொழிற்சங்க ஜனநாயகத்தை நிலை நிறுத்தி  BSNLலில் BSNLEUவை உருவாக்கி

ஊழியர்கள் வாழ்வில் மேம்பாடு அடைந்திட அல்லும் பகலும் பாடுபட்டு நிறைவான ஊதியம் பெற்றுத் தந்து,

பதவி உயர்வுத் திட்டம் உருவாக்கி தனியார்மயத்தை தடுத்திட்ட மாமனிதர் தோழர் P. அபிமன்யு அவர்கள் இன்று ஒய்வு பெறுகிறார்.

நமது கடலூர் மாவட்ட்த்தில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளில் பணியாற்றி நமக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் இன்று நிறுவனப் பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

பெற்ற உரிமைகளை போற்றி பாதுகாத்திட அவர் பணி தொடரட்டும்..

அவர் நீடுழீ வாழ்க! வாழ்க!! என்று இந்நாளில் நமது கடலூர்  மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை: