வெள்ளி, 26 அக்டோபர், 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கு முழுமையான போனஸ் பட்டுவாடா நடைபெற்றது

     BSNLEU-TNTCWU

 ஒப்பந்தஊழியர்களுக்கு முழுமையான        போனஸ் பட்டுவாடா நடைபெற்றது
அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஓப்பந்த ஊழியர்களுக்கு  2017-2018 ஆம் ஆண்டிற்கான  போனஸ் ரூபாய் 7000/- பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தொடர் முயற்சி எடுத்த நமது கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், நம்மோடுஇந்த வெற்றிக்கு உறுதுணையாகஇருந்த NFTE,TMTCLமாவட்ட சங்கங்களுக்கும்  நமது நெஞ்சார்ந்த நன்றி...

          போனஸ் நன்கொடையாக முழு நேர பணியாற்றுபவர்களிடம்  ரூபாய் 300/-ம், பகுதி நேர பணியாளர்களிடம் ரூபாய்150 ம் தோழர்களிடம் வசூலித்து  ருபாய்100, ருபாய்50ஐ கிளைகள் எடுத்துக்கொண்டு 200,100ஐ மாவட்ட சங்கத்திடம் வழங்கிடுமாறு தோழமையோடு தொடர் முயற்சி எடுத்த நமது கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், கேட்டுக் கொள்கின்றோம்.

 அது போல் போனஸ் வழங்காமல் விடுபட்டிருந்தாலோ குறைவாக வழங்கப்பட்டிருந்தாலோ மாவட்ட தலைமைக்கு உடனடியாக தகவல் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்
                                                              தோழமையுடன்
           K.T.சம்பந்தம்,  K. விஜயானந்த்
                       மாவட்ட செயலர்கள்                                            

வெள்ளி, 5 அக்டோபர், 2018

28.01.2018ல் நடைபெற்ற JE LICE தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்களில் தளர்வு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 250 தோழர்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளனர்.


தோழர்களே!!!,  தோழியர்களே !!!

      28.01.2018ல் நடைபெற்ற JE LICE தேர்வு முடிவுகளில் மிக மோசமான முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, மதிப்பெண்களில் தளர்வை தரவேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கடுமையாக வாதாடி வந்தது. 10.07.2018 அன்று நடைபெற்ற ஒரு முக்கியமான கூட்டத்தில் BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து DIRECTOR HR அவர்களிடமும் இதே பிரச்சனை விவாதிக்கப்பட்டது. 

     BSNL ஊழியர் சங்கத்தின் கடுமையான தொடர் முயற்சிகளின் காரணமாக சில நாட்களுக்கு முன் கார்ப்பரேட் அலுவலகம் இதற்கான உத்தரவினை பிறப்பித்தது. அந்த உத்தரவின் காரணமாக 250 தோழர்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. BSNL உருவான இந்த 18 ஆண்டு காலத்தில் இலாகா தேர்வில் மதிப்பெண்கள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 22 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.


கடலூர்  மாவட்டத்தில் தோழர்கள்,

1. K.விஜய் ஆனந்த்
2. S.விஜய் ஆனந்த்
3. S.பிரான்சிஸ்கா ரோஜா

ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

         தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.     தொடர் முயற்சி செய்த மத்திய மற்றும் மாநில சங்கங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.