வெள்ளி, 13 டிசம்பர், 2013

23-வது LJCM கூட்டத்திற்கான ஆய்படுபொருள் இறுதிசெய்யப்பட்டது

அன்பார்ந்த தோழர்களே !
கடலூர் மாவட்ட23-வது  லோக்கல் கவுன்சில் கூட்டத்திற்கான ஆய்படு பொருளை இறுதி செய்வதற்கான கூட்டம் 13.12.2013 அன்று NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.ஊழியர்தரப்பு தலைவர் தோழர் .R.ஸ்ரீதர்  தலைமையேற்றார்.ஊழியர்தரப்பு உறுப்பினர்கள் தோழர்கள் N.மேகநாதன், V.குமார், K.மகேஸ்வரன் ,D.சிவசங்கர் ,E.நீதி ,R.ரவி  ,மற்றும் தோழியர் K.பிரேமா ஆகியோர் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கினர்.நிலுவையில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேலான பிரச்சினைகள் ஒரு மனதாக தொகுக்கப்பட்டது.ஊழியர்தரப்பு செயலர் தோழர் K.T.சம்பந்தம் பிரச்சினைகளை ஒருங்கிணைத்து நிறைவுசெய்து முடித்துவைத்தார்.தோழர் K.மகேஸ்வரன் நன்றி நவில கூட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது.



கருத்துகள் இல்லை: