புதன், 1 ஜனவரி, 2014

மாவட்ட செயலகக் கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே!
நமது மாவட்ட செயலகக் கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர் V. குமார் தலைமையில் நடைபெற்றது.அதில்மறைந்த  தோழர் T.S.ராஜன் மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆகியோர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு சென்னை கருத்தரங்கம், கிளைமாநாடுகள், திண்டிவனம் துணைக்கோட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோதப்போக்கு,கடலூர் வெளிப்புறப் பகுதி பிரச்சினைகள், ஆழமாக விவாதிக்கப்பட்டது. பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுகள்
1) சென்னை கருத்தரங்கத்திற்க்கு கடலூர் மாவட்டத்திலிருந்து கடலூர்-மூன்று,சிதம்பரம்,நெய்வேலி,கள்ளக்குறிச்சி,விருத்தாச்சலம்,திண்டிவனம்-தலா
ஒரு சிற்றுந்து(VAN) மற்றும் விழுப்புரத்திலிருந்து ஒரு பேருந்து(BUS) ஏற்பாடு செய்வது.


2) கிளைமாநாடுகளை திட்டமிட்டபடி குறித்த காலங்களில் நடத்துவது.

3} திண்டிவனம் துணைக்கோட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கினை களைந்திட வலியுறுத்தி மாவட்ட நிவாகத்திற்கு கடிதம் கொடுப்பது,விரிவான நோட்டீஸ் போடுவது.


4) கடலூர் கோட்ட வெளிப்புறப்பகுதி நிர்வாகத்துடன்இறுதியாக மீண்டும் ஒருமுறை கடலூர் கிளைச்சங்கம் பேசுவது.


5) குற்றச்செயல்கள்,ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் திண்டிவனம் பகுதி நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் இரண்டு தனித்தனி கடிதங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (RTI)கீழ் கொடுப்பது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக செய்து முடிக்க இணைந்து பணியாற்றுவோம் மேலும் முன்னேறுவோம்.
தோழமையுள்ள
K.T.சம்பந்தம் 
மாவட்டசெயாளர்

கருத்துகள் இல்லை: