திங்கள், 8 டிசம்பர், 2014

மத்திய சங்க செய்திகள்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
     05-12-2014 அன்று நடைபெற்ற FORUM OF BSNL UNIONS / ASSOCIATONS  கூட்டத்தில் நமது BSNL  நிறுவன புத்தாக்கத்திற்கு ஆதரவாக ஏற்கனவே அறிவித்திருந்த போராட்ட அறைகூவலில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி

1) 11-12-2014 அன்று கோரிக்கை தினம் மற்றும் ஆர்பாட்டம் நடத்துவது.

2) 11-12-2014 அன்று முதல் பொது மக்களிடம் ஆதரவு கோரி ஒரு  கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தைதொடர்ந்து நடத்துவது.

3) 25-02-2015 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவது.மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களிடம் கையெழுத்து பிரதிகளை சமர்ப்பிப்பது.

4) காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு  17-03-2015 தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது .

5) வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வதற்கு அனைத்து மாநிலங்களிலும் பெரும் அளவில் ஊழியர்களை திரட்டி கருத்தரங்கம் நடத்தபடவேண்டும் என FORUM முடிவு செய்துள்ளது.
 மத்திய சங்க முடிவு மற்றும் செய்திகள் 
 கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியில் நமது BSNLEU சங்கம் சார்பாக தோழர்கள் அபிமன்யு ,பொது செயலர் ,தோழர் பல்பீர் சிங், தலைவர் ,தோழர் அனிமேஷ் மித்ரா,துணை தலைவர் ஆகியோர் இடம் பெறுவர்.
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி கூட்டம் வரும் 09-12-2014 அன்று நடைபெறும்.
PLI கமிட்டி கூட்டம் 10-12-2014 அன்று நடைபெற உள்ளது.
தோழர்களே ! மேற்கண்ட முடிவுகளை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்கிட அனைத்து சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவோம் வெற்றிபெறச் செய்வோம்.
தோழமையுள்ள
K.T.சம்பந்தம் 
மாவட்டசெயலர்

கருத்துகள் இல்லை: