வெள்ளி, 25 ஜூலை, 2014

அடுத்த நேசனல் கவுன்சிலுக்கான (NJCM) விவாத பொருட்கள் ...

அருமைத் தோழர்களே! நமது பொதுச் செயலர் தோழர்.பி.அபிமன்யு அவர்கள் அடுத்த நேசனல் கவுன்சிலுக்கான விவாதத்திற்கான கீழ்க்கண்ட பிரச்சனைகளை நிர்வாகத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.உங்களின் கவனத்திற்கு . . .

78.2 சத IDA இணைப்புக்கேற்ப ஊழியர்களின் சம்பள விகிதங்களை மாற்றுதல்.
ERP நடைமுறைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை தீர்த்தல்
BSNL CDA நன்னடத்தை விதிகளில் திருத்தம்.
GPF நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்துதல்.
MRS மருத்துவத்திட்டத்தில் சகோதர சகோதரிகளை சேர்த்தல்.
BSNL மாற்றல் கொள்கையில் திருத்தம்.
மருத்துவப்படியை ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வழங்குதல்.
தொழிற்சங்க பொறுப்பாளர்களுக்கான மாற்றல் சலுகையில் திருத்தம்.
ஆயுள் காப்பீட்டுத்தொகையை உயர்த்துதல்.
ஓய்வுக்கு ஓராண்டு முன்பாக ஆண்டு உயர்வுத்தொகை தரும் திட்டத்தை உயிர்ப்பித்தல்.
கூட்டு ஆலோசனைக்குழுக்களுக்கான விதிமுறைகளை வகுத்தல்.
TELECOM FACTORY தயாரிப்புக்கு தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை தாமதமின்றி தருதல்.
இரண்டாவது கேடர் சீரமைப்பு அமுல்படுத்துதல்.
மக்கள் தொகைக்கு ஏற்ப வீட்டுவாடகைப்படியை உயர்த்துதல்.
தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கேடர் சீரமைப்பு.
பல்முனை திறமை கொண்ட ஊழியர்களை உருவாக்குதல்.
விடுப்பைக்காசாக்கும் திட்டத்தில் ஆயுள் காப்பீடு உருவாக்குதல்.
தேசியமொழி அதிகாரி பணியிடங்களை முறைப்படுத்துதல்.
எதிர்மறை மதிப்பெண் திட்டத்தைக் கைவிடுதல்.

கருத்துகள் இல்லை: