செவ்வாய், 28 அக்டோபர், 2014

உழைப்பே வெல்லும்’ : வஞ்சிக்கும் முழக்கம்


தற்போது மத்தியில் ஆட்சியி லிருக்கும் அரசாங்கமானது மக்களை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றுவதில் கைதேர்ந்தது போன்றே தோன்றுகிறது. இவர்கள் தங்கள் வாய்களிலிருந்து கொட்டுகின்ற வார்த்தைகளின்படியே இவர்கள் நடக்கிறார்கள் என்று இதற்கு அர்த்தம் அல்ல. ஒரு திசையில் போவதாகச் சொல்லிக்கொண்டே எதிர்திசை யில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.`உழைப்பே வெல்லும்’ என்கிற அரசின் திட்டம் குறித்து கார்ப்பரேட் நாளேடு களில் பல வண்ணங்கள் வெளியாகியுள்ள விளம்பரங்கள் இதனையே உறுதி செய்கிறது. 

இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவர்களில் ஒருவரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், `நாட்டில் உழைக்கும் மக்களுக்காக’ புதிய அரசாங்கத்தால் முக்கியமானதொரு திட்டமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டமானது தொழிலாளர்களுக்கு ஏராளமான நன்கொடைகளை அளித் திருப்பதாக அரசாங்கத்தின் சார்பில் அறி விப்புகள் அள்ளித் தெளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், கார்ப்பரேட் ஊடகங்களோ `வர்த்தக நடை முறைகளை’ மிகவும் எளிமைப்படுத்தி விட்டதாகவும், வேலையளிப்பவர்களை `இன்ஸ்பெக்டர்களின் ஆட்சியி லிருந்து’ (‘iளேயீநஉவடிச சயத’) விடுவித்திருப்பதாகவும், பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கின்றன. தொழிலாளர் மற்றும் தொழில்துறைப் பிரச்சனைகளில் ஆர்வம் உள்ளோர் இந்த முரண்பாட்டைக் காணாமல் இருக்க மாட்டார்கள்.

உண்மையானசாராம்சங்கள் என்ன?
இத்திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட் டுள்ள பல அம்சங்கள் குறித்து உண்மை நிலை என்ன? தொழிலாளர்களைத் திசைதிருப்பும் விதத்தில் `உழைப்பே வெல் லும்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட் டத்தின் கீழ் தொழிலாளர்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய ஒரேயொரு அறி விப்பு, ஊழியர் வைப்பு நிதிக் கணக்கு வைத்திருப்போருக்கு பொதுவான கணக்கு எண் கொடுக் கப்பட்டிருப்பதுதான். தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுகையில், தன் னுடைய ஊழியர் வைப்பு நிதிக் கணக் கையும் பிரச்சனை எதுவும் இல்லாமல் மாற்றிக் கொள்ள இது வகை செய்கிறது. ஆயினும் இது இப்புதிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நாட்டில் ஊழியர் வைப்புநிதிக் கணக்கு வைத்திருக்கும் நாலு கோடி பேருக்கும் பொதுவான கணக்கு எண் தரப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாகப் போராடிவந்ததன் விளைவாக த்தான் இவ்வாறு முடிவுமேற்கொள்ளப்பட்டிருக் கிறது. 

ஒரு சில மாதங் களுக்குள் இதற்கான நடைமுறை முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. புதிய அரசாங்கம், இதுதொடர்பாக ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாத நிலையில், தற்போதைய பிரதமர் இத்திட்டத்தினைத் துவக்கி வைத்ததன் மூலம் இது தங்களால்தான் கொண்டு வரப்பட்டது என்பது போன்ற தோற்றத்தை மிகவும் எளிதாக ஏற்படுத்திக் கொண்டுவிட்டது. உண்மையில், இவ்வாறு இத்திட்டத்தைத் தொடங்குகையில், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட முக்கியமானதொரு அறிவிப்புதான், வேலையளிப்பவர்கள் மத்தியில் கொண் டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது. அதாவது அரசாங் கம் `இன்ஸ்பெக்டர் ஆட்சி’க்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்தான் அவ் வாறான மகிழ்ச்சியை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

உண்மை யில் தற்போது இ.பி.எப்., இ.எஸ்.ஐ., சுரங்கத் தொழில்களில் பாது காப்பு, தொழிலாளர் நலன் ஆகியவற்றுக்கு எதிராக முறைகேடுகள் நடைபெறுகையில் அவற்றின் மீதுபெயரளவிலாவது நடவடிக்கை எடுத்து வரும் ஆய்வாளர்கள் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் திட்டத்திற்குத்தான் இத்தகைய வரவேற் பினை வேலையளிப்போர் அளித்திருக் கிறார்கள்.இவ்வாறு நடவடிக்கைகள் எடுத்துவந்த ஆய்வாளர்களுக்கு, நம்முடையபிரதமர் புதியதாக ஒரு `வேலை கலாச்சாரத்தை’ப் பிரகடனம் செய்திருக்கிறார். ஆய்வாளர்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகுறித்த விதிகள் பிரதமர் அலுவல கத்திலிருந்து அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. வேலையளிப்பவர்கள் இனிவருங்காலங்களில் தாங்கள் ஆய் வாளர்களுக்கு அனுப்ப வேண்டிய 16 விதமான தொழிலாளர்நல சட்டங்களின் கீழான அறிக்கைகள் அனைத் தையும் அவர்களே `சுயமாக சான்றிட்டு’ (‘selfcertification’), இணைய வழியாகவே அனுப்பிவிட அனுமதிக்கப்பட்டிருக்கிறார் களாம். எனவே தொழிற்சாலை ஆய்வாளர்களோ (Inspector of Factories) அல்லது தொழிலாளர்நல ஆய் வாளர்களோ (Inspectors of Labour) மேற்படி வேலை யளிப்போரின் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லையாம். இப்போது இபிஎப், இஎஸ்ஐபோன்றவை தொடர்பாக சட்டங்கள் இருக்கும் காலத்திலேயே நாட்டில் பெரும்பான்மை தொழிலாளர்கள் இவற்றின்கீழ் பதிவு செய்யப்பட்டு, அவர் களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங் கள் அமல்படுத்தப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

இந்நிலையில் தொழிற்சாலைகளையோ அல்லது தொழிலாளர்நல ஸ்தாபனங் களை எதையுமோ ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டியதில்லை என்ற நிலை வரும்போது நிலைமைகள் மேலும் மோசமாகும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. அதுமட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண் டிய மேலும் பல ஆதாயங்கள் இப்புதிய திட்டத்தின்கீழ் மறுக்கப்பட்டிருக் கின்றன. தொழிலாளர்நல அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, அக்டோபர் 18ஆம் தேதிய தி இந்து பிசினஸ்லைன் நாளேடு குறிப்பிட்டிருப்பதாவது: “அர சாங்கம் தொழிலாளர் களின் சில பிரிவினருக்கு சமூகப் பாதுகாப்பு நடவடிக் கைகள் சிலவற்றை அமல் படுத்திக் கொண்டிருக் கிறது. ஆயினும் அவற்றால் பயனடையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறை வானதாகும்.’’ தற்போதைய அரசின் நடவடிக்கை இந்நிலைமையை மேலும் மோசமான தாகவே மாற்றிடும்.`தொழில்கல்வி’க்குப் பயிற்சிஅளிப்பது போன்ற இதர திட்டங்கள் தொடர்பாகவும், அப்ரண்டிஸ் திட்டங் களில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாகவும் அரசாங்கத்தால் முன்பு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் அவையும் அமல்படுத்தப்பட வில்லை. 

அரசாங்கமானது மிகவும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் `ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா’ (RSBY-Rashtriya Swasthya Bima Yojana)திட் டத்தை மாற்றி அமைக்க இருப்ப தாகவும் அறிவித்திருக்கிறது. ஆனால் மாற்றம் எப்படி இருக்கும் என்று விளக்கப்பட வில்லை. ஆர்எஸ்பிஒய், ஆம் ஆத்மி பீமா யோஜனா மற்றும் இந்திரா காந்தி வயது முதிர்ந்தோர் ஓய்வூதியத்திட்டம் ஆகிய மூன்றும் ஒரே `ஸ்மார்ட் கார்டு’மூலம் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மூன்று திட் டங்களுமே கடந்த பல ஆண்டுகளாகவே அமல்படுத்தப்பட்டு வருகின்றன இப்போது இவற்றில் என்ன மாற்றத்தைக் கொண்டுவர இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இவை தொடர்பாக இவர்கள்மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் அiத்துமே வஞ்சகமானவை என்று மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. 

இத்திட்டத்தின் பிரதான குறிக்கோள், முதலீட் டாளர்களை - உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்களை - திருப்திப் படுத்த வேண்டும் என்பதேயாகும். `இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்கிற பிரதமரின் அழைப்பு மூலம் முதலீட் டாளர்களுக்கு `சிவப்புக் கம்பள வர வேற்பு’ அளிப்பதன் தொடர்ச்சியே இதுவாகும். எனவேதான், தொழிற்சங்கங்கள் தங்கள் ஆழமான ஐயங்களை வெளிப் படுத்தும் அதே சமயத்தில், கார்ப்பரேட் ஊடகங்களும், முதலாளிகளின் அமைப்புகளும் பிரதமரின் இத்தகைய அறிவிப்புகளுக்கு அளவுக்குமீறிய மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளன. பிரதமரின் அறிவிப்புகளை வரவேற் றுள்ள `ஃபிக்கி’ (குஐஊஊஐ) என்னும் முத லாளிகளின் அமைப்பு, “தாங்கள் மேலும் பல தீவிர மாற்றங்களை எதிர் பார்த்தோம்’’ என்று கூறியிருக்கிறது.தொழிலாளர்களின் நலன் சார்பாக தொழிற்சங்க இயக்கங்கள் கோரி வந்த கோரிக்கைகள், `உழைப்பே வெல்லும்’ திட்டத்தில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளன. 

இதனை மூடிமறைத்திடவே, பிரதமர் சொல் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கிறார். எனவேதான், சத்யமேவ ஜெயதே என்ற கோஷத்துடன் `ஷ்ரமேவ ஜெயதே’ (உழைப்பே வெல்லும்) என்ற கோஷத்தை இணைத்துப் பார்ப்பது டன், தொழிலாளர்களை, `ஷ்ரம யோகி’ என்றும், `ராஷ்ட்ர யோகி’ என்றும், `ராஷ்ட்ர நிர்மாதா’ என்றும் புகழ்ந்து தள்ளுகிறார். உழைக்கும் மக்களுக்கு சில ஆதாயங்களை அளித்திருப்பதுபோல் காட்டுவதற்காகவே இத்தகைய ஏமாற்று வேலைகளை அரசாங்கம் செய்து கொண் டிருக்கிறது.மத்தியிலும் இராஜஸ்தான் மற்றும்மத்தியப் பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் பல்வேறு தொழி லாளர் நலச்சட்டங்களில் மாற்றங்களை ஏற் படுத்தி தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப்பறித்துள்ள சூழ்நிலையில் தான் இந்தத் திட்டமும் கொண்டுவரப்பட் டிருக்கிறது. 

தொழிலாளர்களின் மிகப்பெரும்பான்மையினரை தொழி லாளர் நலச்சட்டங்களின் வரையறைகளி லிருந்து அப்புறப்படுத் திடவே இவ்வாறு தொழிலாளர்நலச் சட்டங்களில் மாற்றங் களைக் கொண்டு வந்திருக்கிறது. இவ் வாறு தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர மற்ற மாநில அரசுகளும் தயாராகிக் கொண் டிருக்கின்றன. நாட்டில் இதுநாள்வரை அரசு - நிர் வாகம் - தொழிலாளர் ஸ்தாபனம் என்ற முறையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் பெயரளவிலாவது நடந்து வந்தன. அநேகமாக அவற்றின் முடிவு கேலிக் கூத் தாகவே இருக்கும். ஏன், நாட்டின் உயர்பட்சமுத்தரப்பு அமைப்பான இந்தியத் தொழி லாளர் மாநாடு என்னும் அமைப்பின் பரிந் துரைகளே அமல்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம், பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வந்த முத்தரப்பு தொழிற்சாலைக் கமிட்டிகளைக் கலைத்துவிட்டது. இதற்கு எந்தக் காரணத்தையும் அரசாங்கம் குறிப்பிட வில்லை.தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்து தொழி லாளர்களுக்கு உதவ வேண்டும் என்று உண்மையிலேயே அரசாங்கம் கருது மானால், முதலில் அது, தொழிலாளர் அமைச்சகத்தால் ஒப்பந்தத் தொழி லாளர் (முறைப்படுத்தல் மற்றும் ஒழித் தல்) சட்டத்தின் மீது திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, நான்கு ஆண்டு களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் தூசி மண்டிக்கிடக்கும் கோப்புகளை எடுத்து, அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கட்டும். இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் முடிவு களுக்கு இணங்க, “சம வேலைக்கு சமஊதியம்’’ என்னும் அடிப்படையில் திருத்தங்களேயாகும். இத்திருத்தத்தின் நியாயம் குறித்து எவராலும் ஆட்சேபிக்க முடியவில்லை. ஹரியானாவில் மானேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிற்கூடத் தில் ஒப்பந்தத் தொழிலாளர் என்ற பெயரில் நடைபெற்று வரும் சுரண்டலுக்கு எதிராக கார்ப்பரேட் ஊடகங்கள் கூட தலையங்கங்கள் தீட்டியுள்ளன.
நன்றி: தீக்கதிர் 28.10.2014  ....நாளை முடியும்

கருத்துகள் இல்லை: