புதன், 29 அக்டோபர், 2014

போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாப்போம்!



நேற்றைய தொடர்ச்சி....
ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தற்போது போட்டிபோட்டு வருகின்றன. தற்சமயம் அநேகமாக அனைத்துத் தொழிற் பிரிவுகளிலுமே 50 சதவீதத்திற்கும் அதிக மானவர்கள் ஒப்பந்த மற்றும் கேசுவல் தொழிலாளர்கள்தான். நவரத்தினா பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்புநிலக்கரிக் கார்ப்பரேஷனில் சென்ற செப்டம்பர் 3லிருந்து கடந்த 45 நாட்களுக்கும்மேலாக 14 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர் கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இங்கே 12 ஆயிரம் பேர்கள் மட்டுமே நிரந்தரத்தொழிலாளர்கள். இவ்வாறு ஒப்பந்தமுறை யில் வேலைபார்க்கும் தொழிலாளர்களில் பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகபணியாற்றி வருகிறார்கள். உச்சநீதிமன்றத் தின் கட்டளைப்படி ஊதிய உயர்வு மற்றும் முறைப்படுத்தல் கோரியே இவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு நாட்டில் சுரண்டல் என்பது மிகவும் மூர்க்கத்தனமாக உள்ள நிலையில்தான், வேலையளிப்பவர்களும் அவர்களின் ஊதுகுழல்களும் தொழிலாளர் சட்டங்களில் மேலும் சலுகைகள் வேண்டும் என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் முந்தைய பிரதமர் அவர்கள் அத்தகைய சுரண்டலை நியாயப்படுத்தியதானது வெட்கக் கேடானதாகும். ஒப்பந்தத்தொழி லாளர்கள் நவரத்தனா கம்பெனியில் பயன் பாடுகள் மறுக்கப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று அவரிடம் சுட்டிக்காட்டியபோது, அவர், அவ்வாறு இருப்பதால்தான் அது நவரத்தனா நிறுவனமாக வளர்ந்திருக்கிறது என்று கூறினார். தற்போதைய அரசாங்கம் இதில் மேலும் அரக்கத்தனமாக இருந்திட விரும் புகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. 40 தொழிலாளர் களுக்கு மேல் பணிசெய்தால்தான் சிறு தொழில்கள் என்ற அமைப்பின்கீழ் வரும்என்பதுபோன்று புதிய சட்டம் கொண்டுவரப்பட விருக்கிறது. 

மேலும் இத்தொழில் பிரிவுகளுக்கு தொழிற்சாலை சட்டம்,தொழில் தகராறுகள் சட்டம், இஎஸ்ஐ,இபிஎப் மற்றும் மகப்பேறு மருத்துவப் பயன்பாடு சட்டம் போன்று 14 தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அநேகமாக அனைத்துத் தொழில் பிரிவுகளுமே இச்சட்டத்தின்கீழ் தப்பித்துக் கொள்ள வழியுண்டு. இவ்வாறு நாட்டிலுள்ள தொழிலாளர்களில் பெரும்பாலான வர்களை தொழிலாளர்நலச் சட்டங்களின் அதிகார வரம்பெல்லைக்குள்ளிருந்து விலக்கி வைப்பதற்கே அரசாங்கம் இந்த வேலைகளில் இறங்கி இருக்கிறது. மாறாக இத்தகைய `சிறிய’ தொழிற்பிரிவுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சில அற்பப் பயன்களே அளிக்கப்பட இருக்கின்றன.
இபிஎப் மற்றும் இஎஸ்ஐ போன்ற திட்டங்கள் கூட ஐஆர்டிஏ முறைப்படுத்தியுள்ள பங்களிப்பு ஓய்வூதிய மற்றும் நலத் திட்டங்களின் (உடிவேசiரெவடிசல யீநளேiடிn யனே hநயடவா ளஉhநஅநள)கீழ் மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு விஷயம் மிகவும் தெளிவாகத்தெரிகிறது. மோடி அரசாங்கம் தற்போ திருந்து வரும் வேலையளிப்பவர்களை மட்டும் அல்ல, இனி முதலீடு செய்ய விருக்கும் முதலீட்டாளர்களையும் முகஸ்துதி செய்வதற்காகவும் அவர்களின்கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய விதத்திலும், அனைத்துவிதமான `தடை களை’யும் அகற்றிடவும், `முதலீட்டை’ எளிமையாக ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி இருக் கிறது. தங்கள் குறிக்கோளை எய்து வதற்காக தான் மேற்கொள்ளும் தொழி லாளர் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும், வஞ்சகமான வார்த்தை ஜாலங்களால் மூடி மறைத்திடவும், அவற்றை தங்களுடைய ஊடகங்களின் வாயிலாக சந்தைப் படுத்திடவும் இறங்கியுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்களில் சிற்சில திருத்தங்கள் போதாது, மாறாக அனைத்துத் தொழிலா ளர் நலச் சட்டங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கார்ப்பரேட் ஊடகங்க ளில் ஒருசில ஏற்கனவே கோரத் தொடங்கிவிட்டன.

செயலில் நவீன தாராளமயம்
நாட்டின் தொழிலாளர் வர்க்கம் நவீன தாராளமயக் கொள்கைகளின் நாசகர விளைவுகளை கடந்த 24 ஆண்டு காலமாகவே அனுபவித்து வருகின்றனர். நவீன தாராளமய யுகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் கேசுவல் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் விளைவாக பல்வேறு துறைகளிலும் நடந்துவரும் சுரண்டலின் தன்மை குறித்து பலரால் இன்னமும் சரியானமுறையில் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய-மாநில அரசாங்கங்களின் பல் வேறு திட்டங்களின் கீழ் கோடிக் கணக்கான தொழிலாளர்கள், இவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள்,தாங்கள் தொழிலாளர்கள் என்ற அங்கீகாரம் இல்லாமலேயே, வாழ்க்கைக் கான பிழைப்பூதியம் கூட அளிக்கப் படாமல், வேலை செய்திட நிர்ப்பந்திக் கப்பட்டிருக்கிறார்கள். கல்வியாளர்கள் நடத்திடும் விவாதங்களில் எல்லாம், நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 94-95 சதவீதத்தினர் முறைசாராத் தொழிலாளர்களாக இருப் பது குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கப் படுகிறது. 

விவாதங்களின் முடிவில் முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றப்பட வேண்டும் என்றுதான் எப்போதுமே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே சர்வ தேச தொழிலாளர் ஸ்தாபனமும் இப்பிரச்சனை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறது. 2015இல் நடைபெறவிருக்கும் தன்னுடைய வருடாந்திர மாநாட்டில் இதுதொடர்பாக சில முடிவுகளும் எடுக்க இருக்கிறது. ஆனாலும் எதார்த்த நிலை என்னவெனில், நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் முறை சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதேயாகும். இதற்கு ஒரே விதிவிலக்காக லத்தீன்அமெரிக்க நாடுகள் இருந்து வரு கின்றன. 

இவை ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கிணங்க நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக் கின்றன. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் அக்டோபர் 16 அன்று வெளியிட் டுள்ள ஓர் அறிக்கையின்படி, லத்தீன் அமெரிக்காவில், `2009க்கும் 2013க்கும் இடையே முறைசாராத் தொழிலாளர் எண்ணிக்கை வெறும் 2.6 சதவீதம் மட்டுமே (மொத்த வேலைவாய்ப்பில் 46.6 சதவீதம்) அதிகரித்துள்ள அதே சமயத் தில், நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை 12.7 சதவீதம் (மொத்த வேலைவாய்ப்பில் 53.4 சதவீதம்) வளர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. நம் நாட்டுடன் ஒப்பிடுகையில் என்னே வித்தியாசம்!மாபெரும் நம் ஜனநாயக நாட்டில்இன்னமும் ஸ்தாபனம் அமைத்துக்கொள்வதற்கான உரிமையும், கூட்டுபேர சக்தியுமே உத்தரவாதப்படுத்தப்பட வில்லை. இத்தகைய நம் நாட்டில்`உழைப்பே வெல்லும்’ போன்ற வஞ்சகத்திட்டங்கள் நாட்டிலுள்ள தொழிலாளர் களுக்கு உதவப் போவதில்லை. உண்மையில், ஸ்தாபனம் அமைத்துக்கொள்வதற் கான உரிமைக்காவும், கூட்டு பேர சக்திக்காகவும் நம் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்காக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் 87 மற்றும் 98 கன்வென்ஷன்களை நிறைவேற்ற வலியுறுத்தி நாம் நடத்தும் போராட்டங்களுடன் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் தன்னைஇணைத்துக் கொண்டிருக்கிறது.

தொழிலாளர்களின் நலன் காத்திட,நாட்டில் ஏராளமான சட்டங்கள் இருந்த போதிலும்கூட, தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது கட்டாயம் என்ற முறையில் நாட்டில் எந்தச் சட்டமும் கிடையாது. பின் எப்படி உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என்று நம்மை நாம் பீற்றிக் கொள்கிறோம்? நாட்டில் வெறும் 31 சதவீத வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளவர்களின் ஆட்சியில், தொழிலாளர்கள் தங்களுக்கென்று ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலையும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள் ஸ்தாபனத்தை அங்கீ கரிக்கும் நிலையும் இல்லாதிருப்பது ஏன்? இத்தகு கேள்விகள் அனைத்தும் எழுப்பப்பட்டு விரைவில் விடைகள் காணப்பட வேண்டியிருக்கின்றன. இன் றைய தினம் ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதலின் உண்மையான குணத்தைப் புரிந்துகொள்ள இத்தகைய கேள்விகளை நாம் எழுப்பி அவற்றிற்கு விடை காண வேண்டியதும் நம் பணியாகும்.

தொழிலாளர்கள் எதிர்த்திட வேண்டும்
ஆட்சியாளர்களின் தாக்குதல்களை தொழிலாளர் வர்க்கம் எதிர்த்திட வேண்டும், எதிர்த்திடும். அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் மற்றும் தேசிய மட்டத்திலான சம்மேளனங்களும், பல்வேறு மத்திய-மாநில ஊழியர் அமைப்புகளின் கூட்டுமேடை, தங்கள் பத்து அம்சக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதுடன், ஆட்சியாளர்கள் தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு விரோதமான திருத்தங் கள் கொண்டுவந்திருக்கும் பிரச்சனையையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளது. செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற தேசியசிறப்பு மாநாட்டின் அறைகூவலுக் கிணங்க, அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவிலான, பிராந்திய அளவி லான மற்றும் உள்ளூர் வடிவிலான பிரச் சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வரு கின்றன. டிசம்பர் 5 அன்று அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் தில்லியிலும் நடைபெறவிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்காகத் தயாரிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர் வர்க்கம் தங்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் வென்றெடுத்த கோரிக்கைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒன்றுபட்டபோராட்டங்களைத் தீவிரப்படுத்தி யுள்ளனர். வரவிருக்கும் நாட்கள் போராட்ட நாட்களாக இருக்கப் போகின்றன.
கட்டுரையாளர் தோழர் ஏ.கே. பத்மநாபன் அ.இ.தலைவர், சிஐடியு

கருத்துகள் இல்லை: