புதன், 13 நவம்பர், 2013

தோழியர் K .K .விஜயா ( SR TOA கேரளா மாநிலம்)--- நெகிழ்ச்சி....

அன்பார்ந்த தோழர்களே !
    நவம்பர் 6 முதல் 8 வரை கேரள மாநிலச்சங்கத்தின் 7 -வது மாநில மாநாடு கோட்டயத்தில் நடைபெற்றது. நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதற்குப்பின்னர் தோழர்,தோழியர்களுக்கு சந்தேகங்கள்,விளக்கங்கள் கேட்கலாம் என வழக்கம்போல் அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களது சந்தேகங்களை,விளக்கங்களை சீட்டில் எழுதி கொடுத்தனர். அதில் ஒரு சீட்டில் எழுதி இருந்ததை நமது பொதுச்செயலர் முகமலர்ச்சியோடு படிக்கிறார். அக்கடித வாசகம் ....
    "  தோழர், என் மொத்த மாத சம்பளம் இப்போது அரை லட்சத்தை தாண்டிவிட்டது. நான் கனவில் கூட நினைத்தது இல்லை  ஒரு நாள் எனது சம்பளம் அரை லட்சத்தை தாண்டும் என்று. என் வாழ்வில் எதிர்பார்த்ததும். இல்லை BSNL ஊழியர் சங்கத்தால்  மட்டுமே இதை சாத்தியமாக்க  முடிந்தது  "     அந்த  சீட்டை எழுதிக்கொடுத்தவர் பாலக்காட்டைச் சேர்ந்த தோழியர் K .K .விஜயா( SR TOA).

கருத்துகள் இல்லை: