வியாழன், 25 ஆகஸ்ட், 2016
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016
இரங்கல் செய்தி
தோழர்களே !
நம்முடன் முகையூர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த தோழர் C.வனத்தையன் டெலிகாம் டெக்னிசியன், நேற்று (22.08.2016) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் , இன்று (23.08.2016) மாலை 3.00 மணியளவில் முகையூரில் நடைபெறும்.
திங்கள், 22 ஆகஸ்ட், 2016
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016
திங்கள், 15 ஆகஸ்ட், 2016
17.08.2016 அன்று அனைத்து கிளைகளிலும் கோரிக்கை முழக்ககம் செய்திடுவீர்!
அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
UNITED FORUM அறைகூவலின் படி 24அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 17.08.2016 அன்று கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வியாழன், 11 ஆகஸ்ட், 2016
புதன், 10 ஆகஸ்ட், 2016
இரங்கல் செய்தி
தோழர்களே !
சிதம்பரம் சக்திநகர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் G.பாண்டியன் டெலிகாம் டெக்னிசியன், 9.8.2016 அன்று மாலை நடந்த சாலை விபத்தில் சிகிச்சை பலனின்றி மரணமுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016
JAO தேர்வில்வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும்நல்வாழ்த்துக்கள்
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
17.07.2016 அன்று நடைபெற்ற, JAO இலாக்கா போட்டி தேர்வின் முடிவுகள் 08.08.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 944 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்மாநிலத்தில், 98 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது கடலூர் மாவட்டத்தில், கீழ்கண்ட தோழர்கள்தேர்வில்வெற்றிபெற்றுள்ளனர்.
JAO தேர்வில்,வெற்றி பெற்ற தோழர்கள்
K.சரவணகுமார் JE,நைனார்பாளயம்
S.சந்தோஷ்குமார் JE,கடலூர்.
R.ஸ்ரீநாத்JE,கடலூர்.
T.ஷண்முகப்ரியா JE,கடலூர்.
K.M.உமா மகேஸ்வரிJE,சிதம்பரம்.
B.ஸ்ரீதரன்JE,திட்டக்குடி.
தேர்ச்சிபெற்றஅனைவருக்கும்நமது மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.
சனி, 6 ஆகஸ்ட், 2016
"புன்முறுவலுடன் கூடிய சேவையை" மேலும் தீவிரப்படுத்திட கடலூரில் பேரணி..... அனைவரும் பங்கேற்பீர் !
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் பங்குகளை கேந்திர பங்குதாரர் களுக்கு (STRATEGIC BUISNESS PARTNER) விற்றுவிட வேண்டும் என்ற "நிதி ஆயோக்" முடிவினை எதிர்த்து நமது கடலூர் மாவட்டத்தில் 03.08.2016 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றது.பங்கேற்ற அனைவரையும் மாவட்ட சங்கம் வெகுவாக பாராட்டுகிறது.
BSNL நிறுவனம் காக்க போராடும் அதே வேளையில், நமது நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிட பல்வேறு தொடர் முயற்சிகளை செய்து வருகிறது "அகில இந்திய FORUM".அடுத்த கட்டமாக "புன்முறுவலுடன் கூடிய சேவையை" மேலும் தீவிரப்படுத்திட எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி அனைத்து பெரு நகரங்களில் பேரணி நடத்தி BSNL பொருட்களை திட்டங்களை பிரபலப்படுத்திட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளது.அதற்கேற்ப நமது கடலூரில்எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி பேரணி நடைபெறும் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். இது குறித்து நமது மாநிலFORUM வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>
"புன்முறுவலுடன் கூடிய சேவையை" மேலும் தீவிரப்படுத்திட கடலூரில் பேரணி..... அனைவரும் பங்கேற்பீர் !
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் பங்குகளை கேந்திர பங்குதாரர் களுக்கு (STRATEGIC BUISNESS PARTNER) விற்றுவிட வேண்டும் என்ற "நிதி ஆயோக்" முடிவினை எதிர்த்து நமது கடலூர் மாவட்டத்தில் 03.08.2016 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றது.பங்கேற்ற அனைவரையும் மாவட்ட சங்கம் வெகுவாக பாராட்டுகிறது.
BSNL நிறுவனம் காக்க போராடும் அதே வேளையில், நமது நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிட பல்வேறு தொடர் முயற்சிகளை செய்து வருகிறது "அகில இந்திய FORUM".அடுத்த கட்டமாக "புன்முறுவலுடன் கூடிய சேவையை" மேலும் தீவிரப்படுத்திட எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி அனைத்து பெரு நகரங்களில் பேரணி நடத்தி BSNL பொருட்களை திட்டங்களை பிரபலப்படுத்திட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளது.குறித்து நமது மாநிலFORUM வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016
BSNLஐ தனியாருக்கு தாரை வார்க்க அனுமதியோம்-03.08.2016 ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் பங்குகளை கேந்திர பங்குதாரர் களுக்கு (STRATEGIC BUISNESS PARTNER) விற்றுவிட வேண்டும் என்று "நிதி ஆயோக்"பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டுள்ளது.இந்திய நாட்டின் மக்கள் சொத்தாக உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்கின்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதிதான் இது.இதனை அனுமதிக்க முடியாது எனவும் இதனை எதித்து போராடி முறியடிப்பது எனவும் BSNL மற்றும் MTNL-லில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான FORUM முடிவு செய்துள்ளது.அதன் முதற்கட்டமாக 03.08.2016 அன்று நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அனைத்திந்திய FORUM அறைகூவல் விடுத்துள்ளது.மிகவும் சக்தியாக தமிழகத்தில் நடத்திட மாநில FORUM பணித்திருக்கிறது.
எனவே நமது கடலூர் மாவட்டத்தில் 03.08.2016 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டங்களை எழுச்சியோடு நடத்திடுமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.இது குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read >>> தோழமையுள்ள
K.Tசம்பந்தம் P.சிவக்குமரன் S.ஆனந்த் D.சிவசங்கரன்
BSNLEU SNEA(I) AIBSNLEA SNATTA
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















































